உ.பி. மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்லால் என்ற 80 வயது ரிக்ஷாக்காரர், 23வது தடவையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளார். தள்ளாத வயதாக இருந்தாலும், நிச்சயம் போட்டியிடுவேன் என்று உறுதியான குரலில் கூறுகிறார் இந்த ரிக்ஷா தாத்தா.
வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப் போடவே வருத்தப்படும் சோம்பேறிகள் பலருக்கு மத்தியில் இந்த தாத்தா அனைவரையும் வியக்க வைக்கிறார்.
உ.பி. மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜக்லால் தாத்தா. எந்தத் தேர்தல் வந்தாலும் உடனே போய் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வந்து விடுவார். பிறகு தனது ரிக்ஷாவை எடுத்துக் கொண்டு தனி ஆளாக பிரசாரம் செய்யவும் கிளம்பி விடுவார்.
இப்படியாக இதுவரை 22 முறை தேர்தலில் நின்றுள்ளார் ஜக்லால். அத்தனை முறையும் டெபாசிட் பறிபோனது தனிக் கதை.
இந்த நிலையில் நடப்பு லோக்சபா தேர்தலிலும் போட்டியிடப் போகிறாராம் ஜக்லால். இப்போது அவருக்கு வயது 80. ஆனாலும் என்னால் போட்டியிட முடியும், நான் போட்டியிட்டே தீருவேன் என்கிறார் உறுதியான குரலில்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தோற்கிறேனோ, ஜெயிக்கிறேனோ அதுகுறித்து எனக்குக் கவலை இல்லை. லோக்சபா தேர்தலில் நான் நிச்சயம் சுயேச்சையாக நிற்பேன்.
பதேபூர் உள்ளாட்சித் தலைவர் பதவிக்கு ஐந்து முறை போட்டியிட்டுள்ளேன். சட்டசபைத் தேர்தல்களில் எட்டு முறை போட்டியிட்டுள்ளேன். லோக்சபாவுக்கு இதுவரை 9 முறை போட்டியிட்டுள்ளேன். இது எனக்கு 23வது வாய்ப்பு. விட மாட்டேன் என்கிறார் ஜக்லால்.
ஏன் இப்படி என்று அவரிடம் கேட்டால், பதேபூர் மாவட்டத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், ஜெயிக்கிறார்கள். ஆனால் ஊருக்கு நல்லது மட்டும் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.
பதேபூரில்தான் நான் பிறந்தேன், இங்குதான் வாழ்ந்து வருகிறேன். எனது கடைசிக்காலமும் இங்குதான் முடியும். அதற்குள் எனது ஊருக்கு நல்லது செய்து பார்க்க ஆசைப்படுகிறேன். அதற்காகததான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன் என்கிறார் உன்னத நோக்கத்துடன்.
ஜக்லால் தாத்தாவின் இந்த தேர்தல் ஆர்வம் உ.பி. மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜக்லால் தாத்தாவின் பிரசார உத்தியே தனி. ஆள், அம்பு, பரிவாரம் எதுவும் இல்லாமல் தனது ரிக்ஷாவில் ஏறும் வாடிக்கையாளர்களிடம் ஐயா, கண்டிப்பாக எனக்கே ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொள்வாராம்.
சில நேரங்களில் அவரது ஸ்டாண்டில் உள்ள சக ரிக்ஷாக்காரர்கள் இவரை அழைத்துக் கொண்டு பிரசாரம் செய்வார்களாம்.
அதை விட சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. இவரிடம் மட்டும் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் செலவுக் கணக்கே கேட்பதில்லையாம். அப்படியா என்று வியப்புடன் கேட்டால், ஆமாம், கடந்த பொதுத் தேர்தலின்போது ஒரு தேர்தல் பார்வையாளர் என்னை அழைத்து தேர்தல் செலவுக் கணக்கெல்லாம் தாக்கல் செய்கிறீர்களா என்று கேட்டார்.
ஒரு நாளை ஒரு ஆப்பிள் செலவு..
அதற்கு நான் எனக்கு ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்தான் செலவாகிறது என்றேன். அவருக்குப் புரியவில்லை. விளக்கமாக கூறுமாறு கேட்டார்.
நானும், காலையி்ல் ஒரு ஆப்பிளை வாங்கி வைத்துக் கொள்வேன். பகல் பூராவும் பிரசாரம் செய்வேன். பின்னர் பிரசாரம் முடிந்ததும் அந்த ஆப்பிளை சாப்பிடுவேன். இவ்வளவுதான் எனது பிரசார செல்வு என்றேன். அதைக் கேட்டதும் அவர் என்னிடம் செலவுக் கணக்கை கேட்கவே இல்லை.
அதற்குப் பிறகு என்னிடம் யாரும் செலவுக் கணக்கு கேட்கவில்லை என்கிறார் ஜக்லால்.
ஜக்லாலிடம் அருமையான திட்டமும் உள்ளதாம். அதாவது பள்ளித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்காகவே ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதுதான் அது. பள்ளித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை யாரும் பள்ளியில் சேர்ப்பதில்லை. அப்படிப்பட்ட மாணவர்களுக்காக இந்த பள்ளியை கட்ட விரும்புகிறேன் என்கிறார் ஜக்லால்.
கடந்த லோக்சபா தேர்தலில் ஜக்லால் 3949 வாக்குகளைப் பெற்றாராம்.
நன்றி: thatstamil
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
சென்னை: 1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது.
2001 ...
2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடான் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக.
ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக.
காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு ராஜ்யசபா
சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ்.
அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது
செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார்.
2004...
2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.
இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி
மத்திய அமைச்சரானார்.
2006...
2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.
ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.
2008 ...
2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.
2009...
2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
தேர்தலுக்கு பின் மீண்டும் வரும்-காங் நம்பிக்கை:
கூட்டணியை விட்டு பாமக போய்விட்டாலும் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் பாமக தங்களிடம் வந்துவிடும் என்று காங்கிரஸ் நிச்சயமாக நம்புகிறது.
இதனால் தான் இன்று பாமக கூட்டணியைவிட்டு வெளியேறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பாமகவை கூட்டணியில் நீடிக்க வைக்க எவ்வளவோ முயன்றோம். இப்போதும் கூட அவர்களுடன் கூட்டணியையே விரும்புகிறோம். அந்தக் கட்சியுடன் நல்லுறவு நீடிக்கும் என்றார்.
நன்றி: thatstamil dot com
'ஓ' போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்
'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49 ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது எமது இயக்கத்தின் இன்னொரு நோக்கம்.
சராசரியாக எந்தத் தேர்தலிலும் 45 சத விகித வாக்காளர்கள் ஓட்டு போடுவதில்லை. வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் வாங்கினாலும், அது மொத்த வாக்குகளில் 16 சதவிகிதம் மட்டுமேதான். ஓட்டு போடாதவர்களும் ஓட்டு போட வந்தால், பல தேர்தல் முடிவுகள் மாறிவிடும்.
ஏன் ஓட்டு போடுவதில்லை என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று இருப்பதில் ஒருவருக்கு ஓட்டு போடவும் விருப்பமில்லை; எந்த வேட்பாளரையும் ஏற்க முடியவில்லை என்பதாகும்.
எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளருக்கு சட்டப்படி கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பாகும். தேர்தல் விதிகள் 1961ன் கீழ் 49 (ஓ) பிரிவு இந்த உரிமையை வாக்காளருக்கு வழங்கியிருக்கிறது. ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைத்த பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று வாக்காளர் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்யவேண்டும் என்பதே 49 (ஓ).
வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.
எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.
'ஓ' போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.
2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.
3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.
4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஓ' போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.
ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.
ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.
SOURCE: http://keetru.காம்
--------------------------------------------------------------------------------------------------------
ஓ போடு' - ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்
தொடர்புக்கு: ஞாநி 09869046486 / 9444024947.
E mail: fortynineohpodu (at) yahoo (dot) com
49-ஓ போடு - ஜூனியர் விகடன் கட்டுரை
'ஓ' போடு இயக்கத்தின் கருத்துக்களை இயன்ற அளவுக்கு பரப்புங்கள்; நண்பர்களுடன் விவாதியுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------
சூப்பர் ஸ்டார் தொடர்பான எத்தனையோ போஸ்டர்களை நாம் பார்த்திருக்கிறோம். பிறந்த நாள், பட ரிலீஸ், பட பூஜை, திருமண நாள் இப்படி பல தரப்பட்ட நாட்களுக்கு பலவிதமான போஸ்டர்களை நம் ரசிகர்கள் எழுப்புவர்.
ஆனால் சென்னையில் ஓட்டேரி மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட இந்த போஸ்டர் இது வரை நாம் பார்த்த போஸ்டர்களுள் சிறந்த ஒன்று என்று தாராளமாக சொல்லலாம். போஸ்டரில் புரட்சி ஏற்படுத்தும் திருச்சி ரசிகர்களுக்கு கூட இது தோன்றாதது ஆச்சரியம் தான்.
அப்படி என்ன இந்த போஸ்டரில் விஷேஷம் என்கிறீர்களா?
சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு (1970) புரட்சி தலைவர் எம்.ஜி.யாரை வைத்து முரசொலி மாறனின் தயாரிப்பில் வெளியான படம் எங்கள் தங்கம். அதில் எம்.ஜி.யாருக்கு ஜோடி ஜெயலலிதா.
இன்று 2009 இல் முரசொலி மாறனின் புதல்வன் கலாநிதி மாறனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் எந்திரன். “History repeats itself” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. வரலாறு புதிதாக பிறப்பதில்லை. அது திரும்ப திரும்ப நடக்கூடிய ஒன்று என்று அதற்க்கு அர்த்தம்.
போஸ்டர் கூறும் செய்தி என்ன?
“அன்று முரசொலி மாறன் தயாரிப்பில் புரட்சி தலைவரின் எங்கள் தங்கம்.
இன்று கலா நிதி மாறன் தயாரிப்பில் புரட்சி வீரனின் எந்திரன் - வெற்றியடைய வாழ்த்துகிறோம்.”
தற்போது புரட்சி தலைவரைப் போல மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்தை கலாநிதி மாறனின் தயாரிப்பது என்ன ஒரு ஒற்றுமை…!! வாவ்….!!!! இதை கண்டுபிடித்து போஸ்டர் எழுப்பிய அந்த ரசிகர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
நன்றி : சுந்தர் ( http://onlysuperstar.com )

ஆர்மோனியப் பெட்டியில் படுத்துறங்கும் பூனைக்குட்டி ஹாரிஸ் ஜெயராஜ். பாத்திரம் Harris கீழே விழுகிற சத்தம் கேட்டாலே பதறியடிக்கும் பூனை போல, சமீபகாலமாக சில விஷயங்களை பார்த்து பார்த்தே பதறிக் கொண்டிருக்கிறாராம். வேறொன்றுமில்லை, சினிமா தொழிலில் அரசியல்வாதிகளும் குதித்துவிட்டார்கள் அல்லவா? இவர்களின் பைனான்ஸ் தயவில் வளரும் படங்களுக்கு "ஹாரிசிடம் இசையமைக்க கேட்கலாமே?" என்ற ஐடியாவை போட்டுக் கொடுக்கிறார்களாம் சிலர். அவர்களும் சாவகாசமாக இசையமைப்பாளருக்கு போனை போட்டு, "தம்பி நம்ப ஊருதான். நீதான் மியூசிக் போடணும்னு ஒத்த காலிலே நிக்குது. கொஞ்சம் என்னான்னு பாருப்பா" என்கிறார்களாம் அசால்டாக!
சிலர் நேரடியாகவே ஸ்டுடியோ பக்கம் வந்து விடுகிறார்களாம்.
அவர்களை சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறதாம் ஹாரிசுக்கு.
இப்படியே நிலைமை போனால், கம்போசிங்கிற்கு மட்டுமல்ல, முழு படத்திற்கும் வெளிநாட்டிலேயே 'டேரா' போட்டுவிடுவார் என்கிறார்கள் அவரது அருமை பெருமை தெரிந்தவர்கள். இப்படி மெல்லிசையில் மேளத்தை போட்டு அடிக்கிறீங்களே, நியாயமாய்யா...?
காங்கிரஸ் எம்பியாகிறார் ஷாரூக்?
வடக்கு மும்பை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நடிகர் ஷாரூக்கான் நிறுத்தப்படக் கூடும் என்று காங்கிரஸ் கட்சி சூசகமாக தெரிவித்துள்ளது.
இத்தொகுதியின் தற்போதைய எம்பி கோவிந்தா. இவர் மீது கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. அதேநேரம் மீண்டும் போட்டியிட கோவிந்தாவும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருபா சங்கர் சிங் இவ்வாறு கூறியுள்ளார்-
ஷாரூக்கானை இந்தத் தொகுதியின் எம்பியாக்க விரும்புகிறோம். கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு ஷாரூக்கானுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறோம்.
தேர்தலில் போட்டியிட ஷாரூக் கொண்டால் கோவிந்தாவுக்கு பதில் வடக்கு மும்பை தொகுதியில் அவருக்கு சீட் தரப்படும் என்றார்.
ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் ஆதரவாக செயல்பட்டு வருபவர் ஷாரூக்கான். தனிப்பட்ட முறையில் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவர்.

