த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

Showing posts with label சத்யம். Show all posts
Showing posts with label சத்யம். Show all posts

எனக்கு ஈமெயில் மூலம் வந்த தகவல் இது ...

(மொழி பெயர்க்க நேரமின்மையால் அப்படியே உங்களுக்கு வழங்குகிறேன்...)

A letter from Satyam Employee

Dear All,

I (Satyam Employee) am deputed at client location and came across a very interesting conversation in cafeteria yesterday.

One of my co-worker, also deputed with the same client through some lesser known two room company, mustered guts to ask me sarcastically in front of entire team, "So, Satyam is gone! What are you guys planning to do now?" In normal circumstances, I have a habit to not to reply to lose talks, but in front of entire team.... I thought I need to fix this guy's thought process. I asked him, as my military training has imbibed in me the habit to fight till last breadth, "Who says Satyam is gone when I am very much alive here and committed to create value on behalf of my company?". He shot back, "Hello Mr., your chairman has resigned, you guys are facing financial turbulence and you still have a face to say that Satyam is not gone!"

At this juncture, I thought of replying to this guy in his own language. I asked him, "Tell me, what will you do and where will you go if our country India was not there?"

He was not prepared for this level of thought and asked back, "What a stupid question, How can India be gone, it is a country?" I asked him back, "Country! What makes a country? Land? Economy? Our Prime Minister? Our President? Our Geography? Or the PEOPLE? If our PM resigns, will you say India is gone? If our economy faces a slowdown, will you say India is gone? But yes, if the people of a country are lost for any reason, we will say that country has no meaning.

Who cares of vast land of Antarctica today which has just one permanent resident, Father Georgy? Which country does it belongs to? Why does not it has any government? Why does not it has any economy? Or, how many countries were there when humans used to hunt for food in pre-historic times?

Countries, Wealth, Infrastructures and booming economies are nothing but creations of efforts of PEOPLE, and they do not have any existance on their own. And the final blow was, "When one man can create Satyam as an organization of 53,000 people,
why not 53,000 committed people can rebuild one SATYAM?"

இன்னும் 53,000 பேர் சத்யம்ல இருக்காங்களா?



சத்யம் நிறுவனத்தை ஐபிஎம் கம்ப்யூட்டர்ஸ் கையகப்படுத்துவதைத் தவிர்க்க, மேடாஸ் இன்ப்ரா மற்றும் மேடாஸ் ப்ராபர்டீஸை சத்யமுடன் இணைக்க வேண்டும் என ராமலிங்க ராஜு கூறியதாக தெரியவந்துள்ளது. சத்யம் முன்னாள் இயக்குநர்களில் ஒருவர்தான் இப்போது இந்த உண்மையை வெளியிட்டுள்ளார்.

சத்யம் நிறுவனத்தின் இன்றைய மோசமான நிலைக்கு பிள்ளையார் சுழி போட்டதே மேடாஸ் டீல்தான். மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் மற்றும் மேடாஸ் இன்ப்ரா நிறுவனங்களை ராஜுவின் மகன் தேஜா ராஜு கவனித்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்த இரு நிறுவனங்களையும் சத்யம் கம்ப்யூட்டர்ஸுடன் இணைக்க தீவிரமாக முயன்றார் ராமலிங்க ராஜு. ஆனால் இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க, ராஜு சில காரணங்களைக் கூறியுள்ளார். அதில் முக்கியமானது, சத்யம் நிறுவனத்தைக் கையகப்படுத்த, ஐபிஎம் முயன்று வருகிறது, என்பதாகும்.

"ஐபிஎம் கைக்கு சத்யம் போனால், அடுத்த கட்டமாக வேலை இழப்புகள் தொடர் கதையாகிவிடும். கிட்டத்தட்ட நிறுவனத்தின் பணியாளர்களில் 50 சதவீதத்தினரைக் குறைத்து விடுவார்கள். சத்யம் நிறுவனம் கம்ப்யூட்டர் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தினால்தானே ஐபிஎம் கையகப்படுத்தும்... அதுவே, ஐபிஎம்முக்குப் பிடிக்காத வேறு தொழில்களிலும் நம்முடைய கவனத்தைத் திருப்பினால், ஐபிஎம் நம் பக்கம் திரும்பாது. நிறுவனம் தப்பித்து விடும். எனவே மேடாஸை இணைப்பதில் தாமதமில்லாமல் செயல்பட வேண்டும்" என இயக்குநர் குழுவை வலியுறுத்தியுள்ளார் ராஜூ. இதற்கு சில உறுப்பினர்கள் உடனடியாக சம்மதித்து கையெழுத்தும் போட்டார்களாம். ஆனால் பெரும்பாலேர் தங்களுக்கு இந்த டீலில் சந்தேகமிருப்பதாகத் தெரிவிக்க, அதுவே பின்னர் இத்தனை விவகாரங்களும் வெடிக்கக் காரணமாகியிருக்கிறது.


உண்மையில் இதற்கு சில உறுப்பினர்கள் உடனடியாக சம்மதித்து கையெழுத்தும் போட்டார்களாம். ஆனால் பெரும்பாலேர் தங்களுக்கு இந்த டீலில் சந்தேகமிருப்பதாகத் தெரிவிக்க, அதுவே பின்னர் இத்தனை விவகாரங்களும் வெடிக்கக் காரணமாகியிருக்கிறது.

உண்மையில் ஐபிஎம் நிறுவனம் சத்யத்தைக் கையகப்படுத்த முயற்சித்ததா... இந்தக் கேள்விக்கு ஐபிஎம் தரப்பில் இதுவரை பதிலில்லை.

புதிய சிஇஓ


சத்யம் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக விப்ரோவின் முன்னாள் துணைத் தலைவர் விவேக் பால் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே விவேக் பாலின் பெயர் இந்தப் பதவியுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இப்போதைக்கு கருத்து சொல்ல முடியாது என்றும், சத்யம் நிறுவன தலைமைப் பொறுப்பை ஏற்பது குறித்துப தான் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

1999-2005 ஆண்டுகளில் விப்ரோவின் துணைத் தலைவராக இருந்தவர் விவேக் பால். விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாகியாகவும் இருந்தார். விப்ரோ மெடிக்கல்ஸ் பிரிவின் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார். சர்வதேச அளவில் மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவராகப் பார்க்கப்படுபவர்.

விப்ரோவிலிருந்து விலகி பின்னர், டிபிஜியில் இணைந்தார். சத்யம் - மேடாஸ் விவகாரம் உச்சத்தில் இருந்த போது, இவர்தான் ராமலிங்க ராஜூவுக்கு பதில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.அரசு நியமித்துள்ள சத்யம் இயக்குநர் குழுவின் சிஇஓ தேர்வுப் பட்டியலில் விவேக்கின் பெயர் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, எம்பஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெர்ரி ராவ் பெயரும் சத்யம் தலைமைப் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ராமலிங்கராஜு உள்ளிட்ட மூவரின் சிறைக் காவல் நீட்டிப்பு

சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ராமலிங்க ராஜு, அவரது தம்பி ராமராஜு உள்ளிட்ட 3 பேரின் சிறைக் காவலும் ஜனவரி 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணையும் அன்றைக்கே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜு சகோதரர்ளை செபி விசாரிக்கவும் ஹைதராபாத் கோர்ட் அனுமதி மறுத்துள்ளது.

ஜனவரி 12ம் தேதி ராமலிங்கராஜு, ராமராஜு, சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வட்லாமணி சீனவாஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை இன்றைக்கு ஹைதராபாத் கோர்ட் தள்ளி வைத்தது.

ஜனவரி 23ம் தேதி வரை 3 பேரும் சிறைக் காவலில் அடைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. மேலும், ராஜு உள்ளிட்ட மூவரையும் விசாரிக்க அனுமதி கோரி செபி தாக்கல் செய்துள்ள மனுவும் இன்றே விசாரணைக்கு வந்தது.

செபி விசாரணைக்கு அனுமதி மறுப்பு

முதலில் செபியின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

செபி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ராஜு நீதிமன்றக் காவலில்இருப்பதால் விசாரணை தாமதமாகிறது. எனவே அவரை விசாரிக்க அனுமதி தர வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ராமலிங்க ராஜு உள்ளிட்டோரின் சார்பில் ஆஜரான வக்கீல் பரத் குமார், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றார்.

இதையடுத்து வருகிற 19ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி. மேலும் அதுவரை செபியை விசாரிக்க அனுமதிக்க முடியாது எனவும் கூறி விட்டார்.

இதையடுத்து ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது, போலீஸ் காவலில் ராமலிங்க ராஜுவை அனுமதிக்க கோரி காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராமலிங்க ராஜுவின் வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். போலீஸ் காவலில் ராமலிங்க ராஜுவை அனுமதிப்பது தொடர்பாக ஜனவரி 17ம் தேதி முடிவு எடுக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

இதையடுத்து ஜனவரி 19ம் தேதி வரை ராமலிங்க ராஜுவின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டது.

மேலும் 3 புதிய இயக்குநர்கள்

இதற்கிடைய சத்யம் இயந்குநர்கள் குழுவில் மேலும் 3 புதிய இயக்குநர்களை நேற்று அரசு நிர்ணயித்துள்ளது.

சிஐஐயின் நிறுவனர் தருண் தாஸ், இந்திய தணிக்கை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிஎன் மனோகரன், எல்ஐசியின் சூர்யகாந்த் பாலகிருஷ்ண மைனாக் ஆகியோர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.

சத்யத்தை மீட்க நிதியுதவிக்கு முன்வரும் நிறுவனங்கள்

தொடர்ந்து ஒரு வாரகாலமாக அதிர்ச்சி மேல் அதிர்ச்சி செய்தியாக கொடுத்துக் கொண்டிருந்த சத்யம் தரப்பிலிருந்து முதல்முறையாக ஒரு நல்ல செய்தி...

புதிய இயக்குநர்கள் நியமனத்தால் சற்று நம்பிக்கை பெற்ற நிதி நிறுவனங்கள் சில, சத்யத்தை நெருக்கடியிலிருந்து மீட்க நிதியுதவி தர முன்வந்திருக்கின்றன.

இதைவிட முக்கியமான செய்தி, சத்யம் நிறுவனத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேண்டிய ரூ.1700 கோடி உடனடியாகக் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரியத் துவங்கியிருப்பதுதான்.

சத்யம் இயக்குநர் குழுவுக்கு அரசு மேலும் 3 இயக்குநர்களை நியமித்ததைத் தொடர்ந்து, சத்யம் நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களைத் தேடிப் போவதாக இல்லை என தற்காலிகமாக முடிவெடுத்துள்ளனர். இதுவே அந்த ஊழியர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் கைவிட்டுப் போகவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட சத்யம் நிறுவன பேங்கர்கள், மீண்டும் கணிசமான முதலீட்டை இறக்கத் தயாராகியுள்ளனர். ஆனால் இது சத்யம் நிறுவனத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் அல்ல. அரசு அளித்துள்ள உறுதியினால்.

இன்னொருபக்கம், சத்யம் நிறுவனத்துக்கு, வரவேண்டிய பாக்கித் தொகை எவ்வளவு என்று புதிய இயக்குநர்கள் குழு கணக்குப் பார்க்கத் துவங்கியுள்ளது.

இதுவரை, ரூ.1700 கோடி அந்நிறுவனத்துக்கு வரவேண்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தத் தொகை கூடிய விரைவில் வந்துவிடும் என்றும், இதே போல இன்னும் பலகோடி ரூபாய் பாக்கியிருப்பதாகவும், அதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் இயக்குநர் குழுவின் உறுப்பினர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.

'சத்யம் நிறுவனத்துக்கு வரவேண்டியுள்ள தொகை முழுவதுமாகக் கிடைத்தாலே போதும், எந்த நிதியுதவியும் அந்த நிறுவனத்துக்குத் தேவையில்லை. சத்யம் மூடப்பட்ட நிறுவனம் அல்ல. இன்னும் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிற நாட்டின் பெரிய ஐடி நிறுவனம். எனவே நிதிப் பிரச்சினை விரைவில் தீரும் என்றே நம்புகிறேன்', என்றார் பரேக்.

'மைனாம்பதி ஓடவில்லை!!'

இந்நிலையில் சத்யம் முன்னாள் இடைக்கால தலைமை நிர்வாகி ராம் மைனாம்பதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுவது குறித்து தீபக் பரேக்கிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், 'மைனாம்பதியும், சில மூத்த அதிகாரிகளும் வெளிநாடுகளில் உள்ள சத்யம் நிறுவன வாடிக்கையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கி அவர்களின் நம்பிக்கையை திரும்பப் பெறும் முயற்சியில் உள்ளனர். அவர்களில் பலரும் என்னுடன் பேசிக்கொண்டுதான் உள்ளனர், மைனாம்பதி உள்பட', என்றார் பரேக்.

நன்றி ; தட்ஸ்தமிழ் டாட் காம்

சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் பினாமி வங்கிக் கணக்குகள் குறித்து வருமான வரித்துறை கடந்த 2002ம் ஆண்டிலேயே செபி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அப்போதைய மாநில அரசை எச்சரித்திருந்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

ஆனால், ராஜூவுக்கு நெருக்கமானவரான நாயுடு அதை அப்படியே கிடப்பில் போட்டார். அதே போல செபியும் இதை கண்டு கொள்ளவி்ல்லை.

கடந்த 2002ம் ஆண்டு துவக்கத்தில் சத்யம் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் ஹைதராபாதைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர்.

அப்போது ராமலிங்க ராஜூ தனது உறவினர்கள், நண்பர்கள் பெயரில் ஏராளமான வங்கிகளில் பல்வேறு கணக்குகளை வைத்திருந்தது தெரியவந்தது.அந்த கணக்குகளில் ரூ. 30 கோடியளவுக்கு நிதி இருந்தது. இந்தப் பணத்தை சத்யம் பங்குகளை சந்தையிலிருந்து அவ்வப்போது வாங்கவும் விற்கவும் ராஜூ பயன்படுத்தி வந்ததும் உறுதியானது.

இது செபியின் இன்சைடர் டிரேடிங் (insider-trading) வர்த்தக விதிகளுக்கு முரணானதாகும். இதையடுத்து இது குறித்து பங்கு வர்த்தக கண்காணிப்பு அமைப்பான செபிக்கும், மாநில போலீசாருக்கும் வருமான வரித்துறை தகவல் தந்தது.

ஆனால், இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரிக்கவில்லை. இந்த வழக்குகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. அதே போல செபியும் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தான் என்று கூறப்படுகிறது. ராஜுவுக்கு மிக நெருக்கமாக இருந்த நாயுடு இந்த விசாரணைகளை முடக்கினார் என்று தெரிகிறது.

ரூ. 2,065 கோடி சுருட்டிய ராஜூ:

அதே போல சத்யம் நிறுவன வருவாய் மற்றும் லாபம் கணிசமாக உயர்ந்துவிட்டது என ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் பொய்யாகக் கூறி ரூ.2,065 கோடிகளை தனிப்பட்ட முறையில் சம்பாதித்துள்ளார் ராமலிங்க ராஜூ.

சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தி காட்டி இருக்கிறார்.

நிறுவனம் நல்ல நிலையில் செயல்படுகிறது என்பதை காட்டுவதற்காக பல நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளார். இப்படி ஒவ்வொரு முறை அவர் செய்யும் போதும் சத்யம் பங்குகள் விலை அதிக அளவில் உயர்ந்து வந்தன.

ஒவ்வொரு முறை பங்கு விலை உயரும் போதும் ராமலிங்க ராஜூ தனது பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள பங்குகளை விற்றுள்ளார். இதன் மூலம் எக்கச்சக்க லாபம் கிடைத்துள்ளது.

2005ம் ஆண்டு 2 நிறுவனங்களை கையகப்படுத்தியதுடன், லாபம் அதிகமாக இருந்ததாக கணக்குக் காட்டி இருக்கிறார். அப்போது சத்யம் நிறுவன பங்கு 2 மடங்கு அதிகரித்தது. 2006ம் ஆண்டும் இதே போல செய்துள்ளார். அப்போதும் விலை ஏறியது சத்யம் பங்குகள் ரூ.726 வரை விற்றது. இந்த நேரத்தில் ராமலிங்கராஜூ தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் இருந்த 4.84 சதவீத பங்குகளை விற்றார். இதன் மூலம் மட்டும் அவருக்கு ரூ.1,126 கோடி கிடைத்தது.

இதே போல 2001ல் இருந்து 2008 வரை 14 சதவீத பங்குகளை விற்று மொத்தத்தில் ரூ.2,065 கோடி சம்பாதித்துள்ளார்.

தனது பெயரில் இருந்து பெரும் பகுதி பங்குகளை விற்று விட்டதால் கடந்த மார்ச் மாதம் முடிவில் 8.74 சதவீத பங்குகள் மட்டுமே அவர் கைவசம் இருந்தது.

இதன் மதிப்பு ரூ.2,400 கோடியாகும். 2001ம் ஆண்டுவாக்கில் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினரிடம் 22.89 சதவீத பங்குகள் இருந்தன. அதாவது 7.19 கோடி பங்குகள் இவர்களிடம் இருந்தன. இதன் பெரும் பகுதியை கொஞ்சம், கொஞ்சமாக விற்று பணத்தை தங்கள் வசம் எடுத்து கொண்டனர்.

இந்த நேரத்தில் தான் நஷ்டத்தில் இயங்கி வந்த தனது குடும்ப நிறுவனம் மேடாஸ் (Satyam திருப்பிப் போட்டால் Maytas!!) இன்ப்ராவை சத்யம் நிறுவனத்தை வாங்க வைக்கும் முயற்சி நடந்தது.

ஆனால் பங்குதாரர்கள் இந்த அளவு எதிர்ப்பார்கள் என்று ராஜு எதிர்பார்க்கவில்லை. இதனால் வேறு வழியின்றி அது கைவிடப்பட்டது.

நன்றி : தட்ஸ்தமிழ் டாட் காம்


கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் அவர்களுடைய டிரீம் கம்பேனியை (கனவு நிறுவனம்) பற்றி கேட்டால் அவர்கள் கூறும் பதில் ‘Infosys, TCS, Satyam’. இந்த பதிலை கேட்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கும். காரணம், இந்த மூன்றுமே இந்திய நிறுவனங்கள் என்பதால் தான். ஆனால், இன்று ராமலிங்க ராஜூவின் ராஜினாமாவும், பல ஆண்டுகள் நடந்த மோசடிகளும் அதில் வேலை செய்யும் 50,000 ஊழிகளின் வாழ்க்கை கேள்வி குறியாக்கியுள்ளது.

நெற்று 178 ரூபாய் இருந்த சத்யம் பங்கு இன்று நாற்பது ரூபாயாக உள்ளது. அவரது சகோதரின் முன்னால் நிறுவனமான சிஃபி பங்குகள் கூட உலக பங்கு சந்தையில் வீழ்ச்சியை கண்டது. ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ மீண்டும் அதன் பங்கு ஏறலாம். முதலீட்டாளர்களுக்கு லாபம் வரலாம். ஆனால், அங்கு வேலை செய்பவர்கள் நிலை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எந்த பதிவுகளும் அவர்களுக்காக வருத்தம் கூட தெரியவில்லை. இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் அவர்களுக்கு வேலை போனால் பல பேரின் வாழ்க்கை என்னாகும், அவர்கள் வேலைக்கு பாதுகாப்பு உள்ளதா என்று எந்த ஊடகமும் செய்தி தரவில்லை.

இரண்டு மாதங்களாக சத்யம் ஊழியர்களை எப்படி வேலையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்று பலருக்கு தெரியாது. Dress Code அடிப்படையில் நூற்றுக்கு மேற்ப்பட்டவர்கள் வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பினர். ஷூ போடாமல் அலுவலகத்திற்கு வருவது, ஷர்ட்டை டக் இன் செய்யாமல் இருப்பது, அரை மணி நேரம் காலதாமதம் போன்ற விஷயங்களை பெரிதாக்கி வேலையை விட்டு போக சொன்னார்கள். மதியம் 2 மணிக்கு தனிப்பட்ட முறையில், ஒரு ஊழியருக்கு ஹெச்.ஆரிடம் இருந்து போன் வரும், 'மாலை 5 மணிக்குள் வேலையை விட்டு போகவில்லை என்றால் உன்னை வேலையை விட்டு அனுப்பிவிடுவோம் (Termination)' என்று மிரட்டுவர்.

Termination கொடுத்து விட்டால் எந்த நிறுவனத்திற்கு சென்று வேலை வாங்க முடியாது. அதனால், தங்கள் பயம் காரணமாகவே பல சத்யம் ஊழியர்கள் வேலையை விட்டு சென்றனர். வேலையில்லாமல் சத்யம் நிறுவனத்தில் இருப்பவர்களின் நிலை இன்று வரை இது தான். எந்த நேரமும் தங்களுக்கு ஹெச்.ஆரிடம் இருந்து இப்படி ஒரு போன் வரலாம் என்ற பயத்தில் தான் அங்கு வேலை செய்கிறார்கள்.

மிக அமைதியாக பத்திரிக்கைகளுக்கு தெரியாமல், தொலைக்காட்சி மீடியாவை ஏமாற்றி தனது ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிய சத்யம் நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்க ராஜூ "எல்லா பணத்தை என் நிறுவனத்தின் ஊழியர்களுக்காக செலவு செய்தேன். அதில் இருந்து ஒரு பைசா கூட நான், என் உறவினர்கள் எடுக்கவில்லை” என்று கூறுகிறார். தனது நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதாக இருந்தால் வளர்ந்த நிறுவனத்தோடு தங்களை இணைத்துக் (M&A) கொண்டு இருக்கலாம். பொய்யான லாபத்தை காட்டி சத்யம் பங்குகளின் விலையை உயர்த்தி மக்கள் பணத்தை ஏன் ஏப்பம் விட வேண்டும்? இனி தவறு மறைக்க முடியாத நிலையில் "ஊழியர்களின் பெயரை சொல்லி கருணை சம்பாதிக்க பார்க்கிறார்”. தன் தவறு தனது ஊழியர்களிடம் இருந்து ஆதரவு எதிர்பார்க்கிறார்.

தனது நிறுவனம் செய்த மோசடிக்கு யாரூக்கு சம்மந்தமில்லை என்பது எல்லோர் காதிலும் (செஃபி உட்பட) பூ சுத்துவது போல் தனது ராஜினாமா கடிதத்தில் ஒன்று குறிப்பிடுயிருந்தார். தன் நிறுவனத்தில் நடந்த மோசடி எந்த போர்ட் மெம்பர்ஸ்க்கும் தெரியாது என்று கூறியுள்ளார். சத்யம் ஆடிட் செய்த ஆடிட்டர்கள், போர்ட் மெம்பர்ஸ் எல்லோருக்கும் இதில் கண்டிப்பாக பங்கு இருக்க வேண்டும். மாதம் சம்பளம் வாங்கும் நாமே வீட்டு வரவு, செல்வை பார்க்கும் போது கோடி கணக்கில் முதலீட்டு செய்த போர்ட் மெம்பர்ஸ் ஆண்டு நிதி கணக்கை பார்க்காமல் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் என்பது மிக அபத்தமாக உள்ளது. படிக்காத பாமரன் கூட எவ்வளவு செலவானது என்று கேள்வி கேட்பான். அந்த கேள்வி கூட கேட்க தெரியாதவர்கள் போர்ட் மெம்பர்ஸ்யில் இருக்கிறார்களா ? அல்லது கேள்வி கேட்காதவர்களை போர்ட் மெம்பர்ஸாக வைத்திருக்கிறார்களா ? என்று புரியவில்லை.

சிறு முதலீட்டாளர்கள் சார்பில் கேள்வி கேட்க வேண்டிய சுதந்திர போர்ட் இயக்குநர் (Independent Board Director) சில நாட்களுக்கு முன்பு தான் தன் வேலையை ராஜினாமா செய்தார். பல ஆண்டுகள் நடந்த மோசடியை கேள்வியை கேட்காமல் அமைதியாக இருந்தவர், திடீர் நல்லவன் போல் சத்யம் விட்டு ஒதுங்கிய அந்த Independent Board Director மீதும் தவறு இருக்கிறது.

இப்படி சத்யம் நிறுவனத்தில் பல பேர்களுக்கு பங்கு உண்டு என்பது தெளிவாக புரிக்கிறது. ஆனால், ராமலிங்க ராஜூ தன் மீது தவறை சுமத்திக் கொண்டு மற்றவர்களை காப்பாற்ற நினைக்கிறார். சத்யம் நிறுவனத்தின் மோசடியால் உலக வர்த்தக பார்வையில் இந்திய ஐ.டி நிறுவனங்களின் நேர்மையை சந்தேகிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

முதலீட்டாளார்களின் பணத்திற்கு செஃபி தலையிட்டு ஒரு தீர்வு காணும். சத்யம் நிறுவனத்தை வாங்க வேறு ஒரு நிறுவனம் முன் வரும். ஆனால், அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலை போனால்...... இன்னும் வேலையில்லாத திண்டாட்டம் அதிகமாகும். பண மோசடி போன்ற போன்ற பிரச்சனை வரமால் செஃபி எடுக்கும் நடவடிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். வேலையில்லாத திண்டாட்டம் வரமால் இருக்க என்ன செய்ய போகிறார்கள் ????

கேள்விகள் மட்டுமே உள்ளன. பதில் பண முதலைகளிடம் உள்ளது. விழுங்கிய பணத்தை ஏப்பம் விட்டுக் கொண்டு இருப்பதால் விடைக்காக பலர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நன்றி ; குகன்

கொசுறு செய்தி :

சத்யம் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம்
Imageமோசடி புகாருக்கு உள்ளான `சத்யம் கம்ப்யூட்டர்ஸ்' நிறுவனம், அடுத்த மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்யும் என்று `ஹெட்ஹன்டர்ஸ் இன்டியா' என்ற பணியாளர் தேர்வு நிறுவனத்தின் தலைவர் கிரிஸ் லட்சுமிகாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-

சம்பளம் கொடுப்பதற்கே, சத்யம் நிறுவனத்திடம் பணம் இல்லை. எனவே, அடுத்த மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்படக்கூடும். உபரியாக சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் இருப்பதால், சம்பளம் 10 சதவீதம் குறைக்கப்படக்கூடும். இவற்றை எல்லாம் எதிர்பார்த்து, சத்யம் நிறுவன ஊழியர்கள் வேறு நிறுவனத்துக்கு முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலைவரை, சத்யம் ஊழியர்கள் 7,800 பேர் வேலைவாய்ப்பு இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர். புதன்கிழமை பிற்பகலுக்குள் இந்த எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்ந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பண நிலைமை திருப்திகரமாக இல்லை என்று சத்யம் நிறுவனத்தின் இடைக்கால தலைவர் ராம் மைனாம்பதி ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையே, ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐ.டி.-பிபிஓ சங்கம் அறிவித்துள்ளது.


நன்றி : அதிகாலை



சத்யம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராமலிங்க ராஜூ செய்துள்ள மோசடியின் அளவு ரூ.8000 கோடி!. இது அவரே, தன் கடிதத்தின் மூலம் ஒப்புக் கொண்டுள்ள தொகை.

இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனத்திலும் நடக்காத பெரும் முறைகேடு இது. கிட்டத்தட்ட 2000ல் அமெரிக்காவின் வர்த்தக பூதம் என்ரானில் நடந்த முறைகேடுகளுக்கு சற்றும் சளைக்காத மோசடி இது என்று வர்ணிக்கிறது இந்திய தொழில் கூட்டமைப்பு.

பொய்யான கணக்கைக் காட்டிக் காட்டியே ஒரு வருடமல்ல... கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஏமாற்றி வந்திருக்கிறார் ராமலிங்க ராஜூ.

ராமலிங்க ராஜூவின் இருப்பு நிலைக் குறிப்பின்படி சத்யம் நிறுவனத்தின் கையிருப்பு ரொக்கம் ரூ.5,361 கோடிகள். ஆனால் நிஜத்தில் இவ்வளவு பணம் கையிருப்பில் இல்லையாம். ரூ. 5040 கோடிகள் செயற்கையாக கணக்கேடுகளில் உருவாக்கிக் காட்டப்பட்டுள்ளதே தவிர, நிஜத்தில் கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.300 கோடிக்கும் குறைவு.

அதேபோல ஒவ்வொரு காலாண்டிலும் கிடைத்த உண்மையான லாபத்தைச் சொல்லாமல், கூடுதலாக ஏற்றி வைத்து மீடியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவு, சத்யம் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மேலும் மேலும் உயர்ந்தது.

இன்னொன்று சத்யம் நிறுவனம் தனது அன்றாட பிஸினஸைக் கவனிக்கக் கூட பணமின்றி தடுமாறிய போது, தனிப்பட்ட முறையில் ரூ.1,236 கோடி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும், அது நிர்வாகக் குழுவுக்கே தெரியாது என்றும் கூறியுள்ளார். ஆக இந்தத் தொகையை ராஜூவுக்கு திருப்பித் தர வேண்டும் சத்யம் நிறுவனம்!!

இவ்வளவு தொகை கையிருப்பில் உள்ளதாக, பொய்யான கணக்கேடுகள் தயாரித்து தனது பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், புரமோட்டர்கள், பங்குச் சந்தை என சகலரையும் ஏமாற்றி வந்திருக்கிறது சத்யம்... அதாவது இந்த நிறுவனத்தின் பெயரில் ராமலிங்க ராஜு.

பெட்டிக்கடை வியாபாரமல்ல!:

இந்த முறைகேடுகள் மற்றும் ராஜுவின் நடவடிக்கைகள் எதுவுமே எங்களுக்குத் தெரியாது என கூலாக சொல்லிவிட்டு தப்பிக்கப் பார்க்கின்றனர் சத்யம் இயக்குனர் குழு. ராஜுவும் அப்படித்தான் கடித்த்தில் கூறியுள்ளார். தன்னைத் தவிர யாருக்கும் இந்த மோசடிகள் எதிலும் துளியும் சம்பந்தமில்லை என்று கூறி மொத்தமாக அந்தக் கூட்டத்தையே இந்த சீனிலிருந்து அப்புறப்படுத்த முனைகிறார்.

எல்லாமே ஒரு தனி மனிதனுக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்லித் தப்பிக்க இது ஒன்றும் பெட்டிக் கடை வியாபாரமில்லை. இயக்குனர்கள் குழு, தலைமை நிர்வாகிகள் என பக்காவான கார்ப்பரேட் அமைப்பு இது.

தனது ஒவ்வொரு செயலுக்கும் இயக்குனர்கள் குழுவைக் கூட்டி விவாதித்து, ஒப்புதல் பெற்றுள்ளார் ராமலிங்கராஜூ. ஒவ்வொரு காலாண்டு ரிசல்ட் கூட்டத்திலும் இயக்குனர்கள் குழு கூட்டாகவே இந்தப் பொய்களை அறிவித்து வந்துள்ளது. பிறகெப்படி, ராஜுவின் மோசடிகளில் இந்தக் குழுவுக்கு பங்கில்லாமல் போகும்?

இந்த லட்சணத்தில் நிறுவனத்தின் ஒளிவு மறைவற்ற நேர்மை மற்றும் நிர்வாகத் திறமைக்காக சர்வதேச விருதுகளெல்லாம் வழங்கப்பட்டுள்ளன!.

ராஜூவின் இந்த தில்லுமுல்லுவை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது என கொதிப்புடன் கூறுகின்றனர் இந்திய பங்குச் சந்தை ஆய்வாளர்கள்.

'சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்கள் அனைத்தின் மீதும் மிகப்பெரிய சந்தேகத்தை விதைக்க அவரது மோசடி காரணமாகிவிட்டது என்கிறார் நாஸ்கம் தலைவர் கணேஷ்.

ஒன்று ராமலிங்க ராஜு சொல்வதுதான் உண்மை என்றால், பல முன்னணி நிறுவனங்கள் லாபத்தைக் காட்டும் நடைமுறை இதுதானா? எல்லாமே சீட்டுக் கட்டு மாளிகைதானா? பெரிய அளவு முதலீடு, கையிருப்பு, லாபம் எனக் காட்டி அரசின் சலுகைகளையும், நிறுவனப் பணத்தையும் மொத்தமாக அனுபவிப்பதும், இந்தியாவின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தையும் பெற்று பெரிய மனிதர்களாக உலா வர இப்படியும் வழியிருக்கிறதா...

அல்லது,

உண்மையிலேயே இவ்வளவு தொகை லாபமாகக் கிடைத்தாலும் அதை அப்படியே 'லபக்கி' விட்டு, இப்படியெரு கடிதம் எழுதிவிட்டால், ஏழு ஆண்டோ பத்தாண்டோ தண்டனையோடு முடிந்துவிடப் போகிறது. அதிலும் வாய்தா, ஜாமீன் என இழுத்தடிக்க எத்தனையோ ஓட்டைகள் இந்த நாட்டு கம்பெனிச் சட்டத்தில் உள்ளன. ஆனால் ரூ.8,000 கோடி ரூபாய் மிஞ்சுமல்லவா... எத்தனை ஆண்டுகள் முயன்றாலும் சம்பாதிக்க முடியாத பெரும் பணம் ஆயிற்றே...

சிக்கலில் ஆடிட்டர் நிறுவனம்:

ஆனால், இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கவனித்த பிரைஸ்வாட்டர் கூப்பர் ஆடிட்டிங் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இல்லாத பணத்தை ராஜூ கணக்கில் காட்ட இவர்களும் உதவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

செபியின் புலனாய்வுப் பிரிவும், மத்திய கம்பெனிகள் விவகாரத் துறையும், ஆந்திர மாநில அரசும் பல்வேறு கோணங்களில் விசாரணையை துவங்கியுள்ளன.

இன்னும் கிளறக் கிளற என்னென்ன பூதங்கள் கிளம்பி வரப்போகின்றனவோ தெரியவில்லை!.

பாவம் ஊழியர்கள்:


இந்த விவகாரத்தி்ல் தேவையில்லாமல் சிக்கிக் கொண்டிருப்பது சதயம் நிறுவன ஊழியர்கள் தான். தங்கள் எதிர்காலம் குறித்து அதன் 53,000 ஊழியர்களும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

விரைவில் விசாரணையை முடித்து, தவறு செய்தவர்களை எல்லாம் நீக்கிவிட்டு, நிறுவன நிர்வாகத்தையே மாற்றியமைத்து, இந்த நிறுவனத்தை இன்னொரு நிறுவனத்துடன் இணைப்பதே இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு என்கிறார்கள் பொருளாதாக நிபுணர்கள்.

ஆனால், சத்யத்துடன் இணையவோ அல்லது அதை வாங்கவோ வேறு நிறுவனம் தயாராக இருக்க வேண்டுமே..

நன்றி : தட்ஸ்தமிழ் டாட் காம்


நிதியை தவறாக கையாண்ட சர்ச்சை தொடர்பாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது பதவி விலகலை அடுத்து ராம் மையாபதி சத்யம் நிறுவனத்தின் இடைக்கால செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமலிங்க ராஜூ சத்யம் நிர்வாகப் பதவியிலிருந்து விலகுவதாக அதன் போர்ட் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இதுவரை சத்யம் நிறுவனத்திடம் கையிருப்பாக இருப்பதாகக் கூறப்பட்ட ரூ. 5,040 கோடி உண்மையில் கையிருப்பில் இல்லை என்றும், அது நிறுவனத்தின் கணக்கில் திரித்துக் காட்டப்பட்ட பணம் என்றும் ராமலிங்க ராஜூ ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சத்யம் நிறுவனம் ரூ. 2,700 கோடி கையிருப்பில் உள்ளதாகக் காட்டியது. ஆனால், உண்மையில் இருந்த பணம் ரூ. 2,112 கோடி தான். இந்த உண்மை போர்ட் உறுப்பினர்களுக்குக் கூட தெரியாது என்று கூறப்படுகிறது.

சத்யம் நிறுவன தலைவர் ராஜினாமா எதிரொலியால் சத்யம் பங்குகள் ரூபாய் 188-லிருந்து ரூபாய் 30-ஆக சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பங்கு விலைகளை ஏற்றுவதற்காக செயற்கையாக காட்டப்பட்ட இந்த முறைகேடான நடவடிக்கையே இன்று அந்த நிறுவனத்தின் கீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

சத்யம் நிறுவனத்தின் இந்த மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பங்குச் சந்தையுமே கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 750 புள்ளிகள் சரிந்துள்ளது.

சத்யம் நிறுவனத் தலைவரின் இந்த மோசடி ஒட்டுமொத்த தகவல்தொழில்நுட்பத் துறையையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.வர்த்தக நிர்வாகம் குறித்து தங்களுக்கு தாங்களே பாராட்டிக் கொள்வதை கைவிட்டு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பான பிக்கி கூறியுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை வர்த்தக நிர்வாகத்தில் உச்சபட்ச தரத்தைக் கையாண்டு வந்துள்ளது என்றும், தற்போது அந்த தரத்தை பின்பற்றாமல் சத்யம் நிறுவனம் மோசடி செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தகவல்தொழில்நுட்ப நிறுகூனங்களின் அமைப்பான நாஸ்காம் கூறியுள்ளது.

சத்யம் நிறுவனத்தின் இந்த மோசடி என்ரான் நிறுவனத்தின் மோசடியைப் போன்றது என்றும் இதுகுறித்து செபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தெரிவித்துள்ளது. சத்யம் நிறுவனத்தின் மோசடி காரணமாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்பு இல்லை என்றும் அது கூறியுள்ளது.

இதனிடையே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி குறித்து பெரும் மோசடிகள் விசாரணை அமைப்பு விசாரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் பி.சி.குப்தா தெரிவித்துள்ளார்.

இதைன் காரணமாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள ராமலிங்க ராஜூ கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி ; தினமலர் & நிகழ்வுகள்

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    statistics

    Site Counter

    Free Counter