த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...


யாராலும் மறக்க முடியாத, நிகழ்வுகள் நிரம்பிய ஆண்டாக, முடிவுக்கு வந்துள்ளது 2008.

ஆண்டின் தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பான நிகழ்வுகளுக்குப் பஞ்சமே இல்லாமல் ஓடி முடிந்துள்ளது 2008.

வருடத்தின் முதல் நாளிலேயே இந்தியாவின் ராம்பூரில், சி.ஆர்.பி.எப் முகாம் மீது தீவிரவாதிகள் வெறித் தாக்குதல் நடத்தினர். இலங்கையிலோ தமிழ் எம்.பி. தியாகராஜய்யா மகேஷ்வரன் கொல்லப்பட்டார்.

இந்த ஆண்டைப் புரட்டிப் போட்ட முக்கியமான மூன்று விஷயங்கள் தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி மற்றும் கச்சா எண்ணை விலை உயர்வு.

கசப்போடு தொடங்கிய இந்த ஆண்டு, விரக்தியும், வேதனையுமாக முடிந்திருக்கிறது.

மறக்க முடியாத ஆண்டாக மாறிப் போன 2008ஐ திரும்பிப் பார்ப்போம்...

மறக்க முடியாத-2008 (ஜனவரி)
மறக்க முடியாத-2008 (பிப்ரவரி)
மறக்க முடியாத-2008 (மார்ச்)
மறக்க முடியாத-2008 (ஏப்ரல்)
மறக்க முடியாத-2008 (மே)
மறக்க முடியாத-2008 (ஜூன்)
மறக்க முடியாத-2008 (ஜூலை)
மறக்க முடியாத-2008 (ஆகஸ்ட்)
மறக்க முடியாத-2008 (செப்டம்பர்)
மறக்க முடியாத-2008 (அக்டோபர்)
மறக்க முடியாத-2008 (நவம்பர்)
மறக்க முடியாத-2008 (டிசம்பர்)

==>நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

முந்தையது : மறக்க முடியாத-2008 (நவம்பர்)
டிசம்பர்:

1 மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் பதவி விலகினார்.

3 - மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் பதவி விலகினார். அசோக் சவான் புதிய முதல்வரானார்.

8 - டெல்லி, ராஜஸ்தான், மிஸோரம் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி. மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக வென்றது.

11 - மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர் இ தொய்பாவின் முகமூடியான ஜமாத் உத் தவா அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. லஷ்கர் தலைவர் சயீத் உள்ளிட்ட 4 தலைவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்தது.

13 - ஆந்திராவில் 2 என்ஜீனியரிங் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 மாணவர்களை போலீஸார் சுட்டு வீழ்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

14 - தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.

- மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு கெளரவ லெப்டினென்ட் கர்னல் பட்டம் வழங்கப்படும் என ராணுவம் அறிவித்தது.

15 - ஓட்டுக்கு நோட்டு விவகாரத்தில் அடிபட்ட சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் அப்பாவிகள் என நாடாளுமன்றக் குழு அறிவித்தது.

- அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பாக்தாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஈராக் டிவி நிருபர் முன்டாஸர் அல் ஜய்தி, ஷூக்களை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

- திருமங்கலம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

16 - சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

- திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளராக லதா அதியமான் அறிவிக்கப்பட்டார்.

- தெலுங்கு நடிகை பார்கவி குத்திக் கொல்லப்பட்டார். அவரது காதலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

17 - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என சன் குழும தலைவர் கலாநிதி மாறன் அறிவித்தார்.

- சென்னையில் பிளாட்பாரத்தில் தூங்கிய பெண் ரவுடி பரமேஸ்வரி அவரது தம்பிகளாலேயே வெட்டிக் கொல்லப்பட்டார்.

- திருமங்கலம் தொகுதி தேமுதிக வேட்பாளராக தனபாண்டியன் அறிவிக்கப்பட்டார்.

18 - இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் கிரிக்கெட் பயணம் ரத்து செய்யப்பட்டது.

19 - ஹேமந்த் கர்கரே மரணம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் அந்துலே ராஜினாமா செய்து கடிதத்தை பிரதமருக்கு அனுப்பினார். ஆனால் அது பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

- இத்தாலி அருகே கடலுக்கடியில் போடப்பட்ட கேபிள்கள் நாசமடைந்ததால், இன்டர்நெட் சேவை பெரும் பாதிப்பை சந்தித்தது.

20 - சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் பெரியார் தி.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

21 - போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகள் பலியானதாக தமிழகம் முழுவதும் பரவிய வதந்தியால் மக்கள் பெரும் பீதியடைந்து மருத்துவமனைகளை முற்றுகையிட்டனர்.

- பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதி சென்னை வந்தார்.

22 - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தமிழறிஞர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பூரண மது விலக்கு கோரி மனு அளித்தனர்.

- பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

24 - உ.பியில், முதல்வர் மாயாவதியின் பிறந்த நாள் விழாவுக்கு நன்கொடை தர மறுத்த பொதுப்பணித்துறை என்ஜீனியர் மனோஜ் குப்தா, பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. சேகர் திவாரி மற்றும் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

25 - மலேசியாவில் சிக்கித் தவித்த 21 தமிழக இளைஞர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பினர்.

26 - திருமங்கலம் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 26 பேர் களத்தில் இருந்தனர்.

27 - திமுக பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்வானார். 10வது முறையாக தலைவரானார் முதல்வர் கருணாநிதி.

- திருமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் திமுக, அதிமுகவினர் பயங்கர மோதல்.

- அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, முன்னாள் பிரதமர் தேவெ கெளடா சந்தித்துப் பேசினார்.

- மும்பை சிறையில், தீவிரவாதி கஸாப்பை, 35 சாட்சிகள் அடையாளம் காட்டினர்.

28 - ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.

- பெங்களூரில் போலீஸாருக்குப் பயந்து ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் நுழைந்த கல்லூரி மாணவரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

- கொழும்பு தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பேர் பலி.

==>நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

முந்தையது : மறக்க முடியாத-2008 (அக்டோபர்)
நவம்பர்:

1 - இலங்கைப் பிரச்சினையை தீர்க்கக் கோரி சென்னையில் நடிகர், நடிகையரின் பிரமாண்ட உண்ணாவிரதம், கமல், ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்பு.

3 - ஆண்டவன் தீர்மானித்தால் நாளைக்கே அரசியலில் இறங்குவேன் என ரசிகர்களிடம் அறிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

5 - அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஓபாமா சரித்திர சாதனையுடன் மாபெரும் வெற்றி பெற்றார்.

8 - திருமங்கலம் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ வீர இளவரசன் மரணமடைந்தார்.

- இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி சென்னையில் சின்னத்திரை நடிகர், நடிகையர் உண்ணாவிரதம்.

12 - சென்னை வந்த பாஜக தலைவர் அத்வானி, ரஜினிகாந்த்தை வீடு தேடிச் சென்று சந்தித்தார்.

- சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் கொலை வெறித் தாக்குதல் - 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். போலீஸ் கை கட்டி வேடிக்கை பார்த்த அவலம்.

13 - சட்டக் கல்லூரி வன்முறையை போலீஸார் வேடிக்கை பார்த்ததைத் தொடர்ந்து கமிஷனர் மாற்றம். புதிய கமிஷனராக ராதாகிருஷ்ணன் நியமனம்.

16 - இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் விஜய், தனது ரசிகர்களுடன் தனி உண்ணாவிரதம்.

19 - பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என். நம்பியார் சென்னையில் மரணமடைந்தார்.

26 - மும்பையில் தீவிரவாதிகள் வெறித் தாக்குதல். 180 பேர் பலியானார்கள். அஜ்மல் கஸாப் என்ற தீவிரவாதி பிடிபட்டான். 9 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

27 - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்தார்.

28 - நாரிமன் ஹவுஸ் மற்றும் டிரைடென்ட் ஹோட்டல் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டது.

29 - தாஜ் ஹோட்டலையும் கமாண்டோப் படையினர் மீட்டனர். தீவிரவாதிகளின் 60 மணி நேர வெறியாட்டம் முடிவுக்கு வந்தது.

30 - உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார். ப.சிதம்பரம் புதிய உள்துறை அமைச்சராக நியமனம்.

- பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு விடுதலை செய்யப்பட்டார்.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (டிசம்பர்)

முந்தையது : மறக்க முடியாத-2008 (செப்டம்பர்)
அக்டோபர்:

1 - பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மரணமடைந்தார்.

2 - ரேஷன் கடைகளில் ரூ. 50க்கு பத்து சமையல் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

- பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

3 - மமதா பானர்ஜியின் தொடர் போராட்டம் காரணமாக சிங்கூரிலிருந்து வெளியேறுவதாக ரத்தன் டாடா அறிவித்தார்.

6 - இலங்கையில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் முன்னாள் ராணுவ தளபதி ஜனக பெரேரா, அவரது மனைவி உள்பட 26 பேர் பலியானார்கள்.

7 - பொருளாதார நெருக்கடியால், வேலையை இழந்த அமெரிக்கா வாழ் தமிழர் தனது மனைவி, 3 மகன்கள், மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

11 - இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

17 - இலங்கைப் பிரச்சினை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட 16 எம்.பிக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினர்.

19 - இலங்கையில் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் திரைப்படத் துறையினர் மாபெரும் போராட்டம் நடத்தினர்.

20 - பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் மரணமடைந்தார்.

23 - இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவைத் தலைவர் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டனர்.

24 - கடும் நெருக்கடியைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டனர்.

25 - புதிய திருப்பூர் மாவட்டம் உதயமானது.

26- மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

- இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சென்னையில் அறிவித்தார்.

28 - விடுதலைப் புலிகள் கொழும்பு அருகே விமானத் தாக்குதலை நடத்தினர்.

30 - அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 70 பேர் பலியானார்கள்.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (நவம்பர்)

முந்தையது : மறக்க முடியாத-2008 (ஆகஸ்ட்)
செப்டம்பர்:

1 - சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 2 ஊழியர்கள் மரணமடைந்தனர்.

5 - சென்னை பல்கலைக்கழக 150வது ஆண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

6 - பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றார்.

- இந்தியாவின் அணு வர்த்தகத்தை அங்கீகரித்து அணு எரிபொருள் சப்ளை நாடுகள் கூட்டமைப்பு அனுமதி அளித்தது. இந்தியாவின் அணுத் தனிமை முடிவுக்கு வந்தது.

7 - விஜயன் கொலை வழக்கில், சுதாவின் தங்கை பானுமதி உள்ளிட்டோர் கைது.

8 - வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் மரணமடைந்தார்.

10 - 6வது முறையாக அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13 - டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானார்கள்.

15 - ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

23 - விபத்தில் மூளை மரணமடைந்த மாணவர் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்து அவரது பெற்றோர் தமிழகத்தையே நெகிழ வைத்தனர். தமிழகத்தில் அதிகரித்துள்ள உறுப்பு தானத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு அமைந்தது.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (அக்டோபர்)

முந்தையது : மறக்க முடியாத-2008 (ஜூலை)
ஆகஸ்ட்:


1 - இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஒப்புதல் அளித்தது.

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மரணமடைந்தார்.

- தமிழகத்தின் 9வது மாநகராட்சியானது வேலூர்.

5 - தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி உருவானது.

7 - ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா டிஸ்மிஸ் ஆனார்.

12 - அமர்நாத் நில விவகாரம் பெரும் கலவரமாக மாறியது. ஜம்மு ஸ்தம்பித்தது. துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியானார்கள்.

25 - தமிழகத்தில் திடீரென ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மாநிலத்தையே உலுக்கியது. பெட்ரோல், டீசல் கிடைக்காமல் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

- ஒரிசாவின் காந்தமாலில் பயங்கர வன்முறை வெடித்தது. 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். சர்ச்சுகள், கிறிஸ்தவ பள்ளிகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

27 - ஜார்க்கண்ட் முதல்வராக சிபு சோரன் பதவியேற்றார்.

28 - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விலகினார். புதிய முதல்வராக வைத்திலிங்கம் தேர்வானார்.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (செப்டம்பர்)

முந்தையது : மறக்க முடியாத-2008 (ஜூன்)
ஜூலை:

7 - காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. 41 பேர் பலியானார்கள்.

- குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவி விலகியது.

- தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு நியமிக்கப்பட்டார்.

8 - ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர்.

12 - வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் இருவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது.

15 - சத்துணவுடன் வாழைப்பழம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

17 - தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கில் சிக்கிய லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

19 - இலங்கை கடற்படையைக் கண்டித்து சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம். கருணாநிதி தொடங்கி வைத்தார்.

22 - பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றது (275-256)

- நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுப் போடாமல் இருக்க ரூ. 1 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பாஜக எம்.பிக்கள் மூன்று பேர் லோக்சபாவில் பணக் கட்டுக்களைக் கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

23 - லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

- எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மதிமுகவை விட்டு நீக்கப்படுவதாக கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.

25 - பெங்களூரில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு. ஒரு பெண் பலி, பலர் படுகாயம்.

26 - அகமதாபாத்தில் 14 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு. 55 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்.

27 - சென்னை, மதுரை, நெல்லையைத் தகர்க்கும் திட்டத்துடன் இருந்த அப்துல் கபூர் நெல்லையில் கைதானார்.

31 - கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று கூறியதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை குசேலன் உள்ளிட்ட ரஜினி படங்களை திரையிட தடை விதிக்கப்படுவதாக கன்னட அமைப்புகள் அறிவித்தன. தனது பேச்சுக்கு ரஜினி வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து தடை விலக்கப்பட்டது.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (ஆகஸ்ட்)

முந்தையது : மறக்க முடியாத-2008 (மே)
ஜூன்:

2 - தமிழ ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை குறைக்கப்படுவதாக அருச அறிவித்தது. ஆனால் இந்த விலைக் குறைப்பு இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி விட்டது.

4 - எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.

9 - பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து துரத்தப்பட்ட நடிகர் கார்த்திக், அகில இந்திய நாடாளும் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.

10 - மத்திய அரசின் சிறந்த நடிகைக்கான விருது பிரியாமணிக்கு அறிவிக்கப்பட்டது.

13 - திமுக கூட்டணியிலிருந்து பாமகவை உடனடியாக விலக்க வேண்டும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பரபரப்பு கோரிக்கையை வைத்தார்.

17 - திமுக கூட்டணியிலிருந்து பாமக விலக்கப்படுவதாக திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அதை முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

21 - மத்திய அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை உ.பி. முதல்வர் மாயாவதி விலக்கிக் கொண்டார்.

25 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா மரணமடைந்தார்.

26 - முன்னாள் ராணுவத் தளதி பீல்ட் மார்ஷல் மானெக்ஷா மரணமடைந்தார்.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (ஜூலை)

முந்தையது : மறக்க முடியாத-2008 (ஏப்ரல்)
மே:

1 - பிரபல காந்தியவாதியும், சமூக சேவகியுமான நிர்மலா தேஷ்பாண்டே மரணமடைந்தார்.

2 - இந்தியர் சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான் அரசு.

- தமிழகத்தை உலுக்கிய பல கோடி ரூபாய் தங்கக் காசு மோசடி தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

5 - மியான்மரை நர்கீஸ் புயல் தாக்கியது. 1 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

8 - தா.கிருட்டிணன் கொலை வழக்கிலிருந்து மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

- சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

13 - ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 80 பேர் உயிரிழந்தனர்.

14 - ஊழல் வழக்கில் சிக்கிய உறவினருக்காக சிபாரிசு செய்து மாட்டிக் கொண்ட தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ராஜினாமா செய்தார்.

18 - தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் விஷச் சாராயம் சாப்பிட்டு 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

30 - தென் மாநிலங்களில் முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தில் பாஜகவின் எதியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (ஜூன்)

முந்தையது : மறக்க முடியாத-2008 (மார்ச்)
ஏப்ரல்:

3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4 - ஓகனேக்கல் விவகாரத்தில் கன்னட அமைப்பினரின் போராட்டத்தைக் கண்டித்து சென்னையில் நடிகர், நடிகைகள் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தனர்.

6 - இலங்கையில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ படுகொலை.

16 - சென்னையில், சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்ட பழனிச்சாமியும், அவரது காதல் மனைவி டாக்டர் திவ்யாவும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.

17 - முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

23 - திருவள்ளூர் அருகே தடுப்பூசி போட்ட 4 குழந்தைகள் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

24 - இசையமைப்பாளர் இமான் - மோனிகா திருமணம் நடந்தது.

25 - அரசு ஆணைகளி்ல் இனி திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (மே)

முந்தையது : மறக்க முடியாத-2008 (பிப்ரவரி)
மார்ச்:

1 - எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் மனைவியை இழந்த வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

2 - சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடியவர்களை தடுத்த தீக்ஷிதர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
4 - தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

5 - கர்நாடக முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான எஸ்.எம்.கிருஷ்ணா தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக மகாராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

6 - கிளிநொச்சியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் எம்.பி. சிவநேசன் கொல்லப்பட்டார்.

7 - பாமகவுக்கு ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்க இயலாது என்பதை முதல்வர் கருணாநிதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

8 - மலேசிய பொதுத் தேர்தலில் ஆளும் பாரிசன் தேசியக் கூட்டணிக்கு பெரும் அடி கிடைத்தது. சாதாரணப் பெரும்பான்மையுடன் அது வெற்றி பெற்றது. 8 முறை தொடர்ந்து வென்ற டத்தோ சாமிவேலு தோல்வி அடைந்தார்.

- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து, கொழும்புக்கு பெண் பைலட்டுகள், ஊழியைகள் இடம் பெற்ற விமானம் இயக்கப்பட்டது.

9 - உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில், வன்னிய கிருஸ்துவர்களுக்கும், தலித் கிருஸ்துவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள்.

- டெல்லி மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் அலுவலகத்தின் மீது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

- கண்டியில் நடைபெறுவதாக இருந்த சார்க் உச்சி மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டது.

- விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும், நடிகை ஷ்ரேயா ரெட்டிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

10 - மலேசிய பிரதமராக 2வது முறையாக அப்துல்லா அகமது படாவி பதவியேற்றார்.

- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரலாற்றிலேயே மோசமான விபத்தாக, அபுதாபி - துபாய் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர். 150க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து சேதமடைந்தன.

11 - போலி விசா மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற நடிகை புளோரா கைது செய்யப்பட்டார்.

14 - காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் அதிக காலம் நீடிக்கும் புதிய சாதனையையும் படைத்தார்.

- ஈவ் டீசிங்கில் சென்னை மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

- ஆசிப் அலி சர்தாரி மீதான கடைசி ஊழல் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

- இந்தியாவின் முதலாவது க்ரீன்பீல்டு விமான நிலையம் என்ற பெருமையைக் கொண்ட புதிய ஹைதராபாத் விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஷாம்ஷாபாத்தில் தொடங்கி வைத்தார்.

- அஜீத், ஷாலினி மகளுக்கு அனோஷ்கா என பெயர் சூட்டப்பட்டது.

15 - வக்கீல் ஜோதி அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்தார்.

16 - ஓகனேக்கலில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

- அகில இந்திய முஸ்லீம் பெண்கள் தனி நபர் சட்ட வாரியம், புதிய விவாகரத்து வழிமுறைகள் அடங்கிய 'ஷரியத் நிக்கநாமா'வை அறிவித்தது.

- இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தம்பியும், முன்னாள் அமைச்சருமான அனுரா பண்டாரநாயகே மரணமடைந்தார்.

17 - மலேசிய அமைச்சரவையில், 4 தமிழர்கள் இடம் பெற்றனர்.

- அமெரிக்கா செல்ல போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக கைதான நடிகை புளோராவுக்கு ஜாமீன் கிடைத்தது.

19 - திமுகவின் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸின் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், அதிமுகவின் பாலகங்கா ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

- நடிகர் ரகுவரன் மரணமடைந்தார்.

- பாகிஸ்தானின் முதல் பெண் சபாநாயகராக ‌பாமிதா மிர்சா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- பிரபல அறிவியல் நாவலாசிரியர் ஆர்தர் கிளார்க் உடல் நலக்குறைவினால் இலங்கையில் காலமானார்.

- வேலூர் சிறையில் நளினியை பிரியங்கா ரகசியமாக சந்தித்துப் பேசினார்.

20 - நடிகர் சோபன்பாபு மரணமடைந்தார்.

22 - திரைப்பட வசனகர்த்தா என்.பிரசன்ன குமார் புற்று நோயால் மரணமடைந்தார்.

23 - பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் முன்னாள் மனைவி செசிலியா சிகானர் அல்பெனிஸ், மொராக்கோவைச் சேர்ந்த தனது காதலரை நியூயார்க்கில் திருமணம் செய்து கொண்டார்.

25 - மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ராஜினாமா செய்தார்.

- பாகிஸ்தான் பிரதமராக சயீத் யூசுப் ரஸா கிலானி பதவியேற்றுக் கொண்டார்.

- அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

26 - முதல்வர் கருணாநிதி கோட்டைக்கு வந்த போது ஒரு முதியவர் வேட்டியை அவிழ்த்து விட்டு ஜட்டியுடன் ரோட்டில் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

27 - சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சென்னை அருகே உள்ள கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

29 - தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (பிளாட்), தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) மற்றும் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி ஆகியவை சேர்ந்து புதுக் கூட்டணியை அறிவித்தன.

- டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் 10,000 ரன்களைக் கடந்தார்.

- முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி, திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையானார். அவரது மனைவி ரித்துவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

30 - பிரபல முருகன் இட்லி கடை நிறுவனத்தின் சென்னை, திருச்சி, மதுரை நகர்களில் உள்ள கடைகள், உரிமையாளரின் இருப்பிடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

31- ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (ஏப்ரல்)

முந்தையது : மறக்க முடியாத-2008 (ஜனவரி)
பிப்ரவரி:

1 - தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

- ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் மீது இனவெறி ரசிகர்கள் முட்டைகளை எறிந்தனர்.

- இலங்கையின் தம்புலா நகரில் பஸ்சில் வெடிகுண்டு வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.

2 - பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கும், அவரது இத்தாலி காதலி கார்லா ப்ரூனிக்கும் பாரீஸ் நகரில் திருமணம் நடந்தது.

4 - மும்பை ஜூஹு பகுதியில் உள்ள சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டின் மீது கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- நடிகை விந்தியா தொடர்ந்த கற்பழிப்பு முயற்சி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

6- ஆழ்நிலை தியானத்தை மேற்கத்திய நாடுகளில் புகழ் பெறச் செய்த மகரிஷி மகேஷ் யோகி (91) நெதர்லாந்தில் மரணமடைந்தார்.

7 - மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.

- செக்ஸ் டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

- சிறுநீரக மோசடி டாக்டர் அமீத் குமார் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

8 - முன்னாள் சபாநாயகர் ராஜாராம் சென்னையில் மரணமடைந்தார்.

9 - சமூக சேவகர் டாக்டர் பாபா ஆம்தே (94) மரணமடைந்தார்.

10 - சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு மதுரையில் நடந்தது.

11 - சென்னையைச் சேர்ந்த கால் சென்டர் ஊழியரைக் கடத்திய வழக்கில் நடிகை பாபிலோனாவின் தம்பி பாலு கைது செய்யப்பட்டார்.

- இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், அவரது மனைவி சுஜயா சந்திரனுக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

- நீண்ட காலமாக காதலித்து வந்த மான்யதாவை நடிகர் சஞ்சய் தத் மணந்து கொண்டார்.

13 - வட இந்தியர்களுக்கு எதிரான கலவரத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பை போலீஸார் கைது செய்தனர். ஆனால் உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார்.

- மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மார்ச் 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

15 - அமெரிக்காவின் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 7 மாணவர்களை சுட்டுக் கொன்ற மாணவர் தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

16 - நடிகை விந்தியாவுக்கும், நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபாலகிருஷ்ணனுக்கும் குருவாயூரில் திருமணம் நடந்தது.

17 - செர்பியாவிடமிருந்து பிரிந்து சுதந்திர நாடாக தன்னை கொசாவோ பிரகடனம் செய்து கொண்டது.

18 - பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடந்தது.

- தமிழகப் பள்ளிக்கூடங்களில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக மலையாள அமைப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

19 - 50 வருடங்களாக வகித்து வந்த கியூப அதிபர் பதவியிலிருந்து விலகினார் பிடல் காஸ்ட்ரோ.

20 - இந்தியன் பிரீமியர் லீக்கில் இடம்பெற்றுள்ள 82 சர்வதேச மற்றும் தேசிய வீரர்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டனர். எம்.எஸ்.டோணியை அதிக விலைக்கு (ரூ. 6 கோடி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

- பிரபல மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் சென்னையில் மரணமடைந்தார்.

22 - சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீல் ரஜினிகாந்த்தை சக வக்கீல்கள் அடியாட்கள் உதவியுடன் படுகொலை செய்தனர்.

24 - திருவண்ணாமலை அருகே குரங்குகள் சரமாரியாக சாலையின் குறுக்கே பாய்ந்ததால், நிலை தடுமாறிய டாடா சுமோ கார் புளியமரத்தில் மோதி அதில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர்.

25 - கியூப அதிபராக பிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

- விக்ரம், ஸ்ரேயா நடிக்கும் கந்தசாமி படப்பிடிப்பின் போது வேப்ப மரத்தில் பால் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

27 - எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்தார்.

- மனைவியின் ஆட்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவின் மகன் தாசரி பிரபு அவர்களிடமிருந்து தப்பி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

- பெனாசிரின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் பெனாசிர் பூட்டோவின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் மாலிக் ஆகியோர் மீதான அனைத்து ஊழல் வழக்குகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.

29 - இயக்குனர் ஏஆர் முருகதாஸ் திடீரென கைது செய்யப்பட்டார்.

- விவசாயிகளின் ரூ. 60 ஆயிரம் கோடி கடன் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அடுத்தது : மறக்க முடியாத-2008 (மார்ச்)

ஜனவரி:
தேதி 1 - உ.பி மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

- இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தமிழ் எம்.பி. தியாகராஜய்யா மகேஷ்வரன் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

3 - சரத்குமாரின் புதிய கட்சித் தொடக்க விழா மாநாட்டுக்கான பந்தல் கால் மதுரையில் நடப்பட்டது. ராதிகா அடிக்கல் நாட்டினார்.

- விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

- அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

- அஜீத்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

4 - தேசியக் கொடிக்கு அருகே கால் வைத்திருந்ததாக டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா மீது போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

6 -விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் கர்னல் சார்லஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்) ராணுவத் தாக்குதலில் பலியானார்.

- ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய அணி, ஹர்பஜன் சிங் மீதான தடையை ஐசிசி நீக்கும் வரை சிட்னி நகரை விட்டு இந்திய அணி கிளம்பாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆஸ்திரேலிய டூரையும் அது சஸ்பெண்ட் செய்தது.

- சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு குஷ்பு வணக்கம் செலுத்ததால் சர்ச்சை எழுந்தது. கவிஞர் அறிவுமதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுடன் குஷ்பு கத்தி வாதிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாக்கு திருடிய திருடனைப் பிடித்த ஊர் மக்கள் அவரை சரமாரியாக அடித்து, ஜீப்பில் கட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று, கண்களில் ஆசிட் ஊற்றிக் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

- இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க தடை விதித்துள்ளதாக மலேசிய அரசு அறிவித்தது.

8 - கொழும்பு அருகே நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை தேச கட்டமைப்புத் துறை அமைச்சர் டி.எம் தசநாயகா பலியானார்.

- தவறான தீர்ப்புகளைக் கொடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்த சர்ச்சைக்குரிய நடுவர் ஸ்டீவ் பக்னர், இந்தியா - ஆஸ்திரேலிய தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

- மாலத்தீவு அதிபர் மாமூன் அப்துல் கயூமைக் கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. 15 வயது சிறுவன், அதிபரைக் காப்பாற்றினான்.

- கணவரை தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகவும், அவரை பார்க்க விடாமல் தடுப்பதாகவும் நடிகை ஷோபனா மீது நோய்டாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாலினி கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

9 - தொழிலதிபர் தன்னைக் கற்பழிக்க முயன்றாக கூறி ஓசூர் போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரிய நடிகை விந்தியாவின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.

10- டாடா குழுமத்தின் புரட்சி காரான ரூ.1 லட்சம் மதிப்புடைய டாடா நானோ டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

- நடிகர் பாண்டியன் (48) உடல் நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

- மதுரையை கலக்கி வந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் இன்று கைது செய்தனர்.

- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகத்திற்குள் வந்திருப்பதாக வதந்தி பரவியது.

- கன்னடர்களை புறக்கணிக்கும் ரயில்வேயின் போக்கைக் கண்டித்து பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகத்தின் பல ஊர்களில் ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் மீது கன்னட அமைப்பினர் வெறித்தனமான தாக்குதலை நடத்தினர்.

11 - ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

- கஞ்சா வழக்கில் ஆஜராகாமல் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

- சென்னை போலீஸார் தேடி வந்த மதுரை ரவுடி டாக் ரவி மதுரை, திருமங்கலம் கோர்ட்டில் சரணடைந்தார்.

- எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக ஏறி சாதனை படைத்த நியூசிலாந்தின் எட்மண்ட் ஹில்லாரி மரணமடைந்தார்.

13 - ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலலமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அலங்காநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

- சிவாஜி பட வெள்ளிவிழாவின்போது ஆபாச உடை அணிந்து வந்த நடிகை ஷ்ரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி போலீஸில் புகார் கொடுத்தது.

14 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

15 - ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து அலங்காநல்லூரில் துக்க பொங்கல் அனுசரிக்கப்பட்டது.

- நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

- இலங்கையின் மொனரகல்லா மாவட்டத்தில் பஸ் குண்டு விபத்தில் 24 பேர் பலியானார்கள்.

17 - எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு பெரும் இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக வருகிற ஜெயலலிதா சென்றார். எம்.ஜி.ஆர். குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

- பெர்த் டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே 600வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

- திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராஜுக்கு பணம் கேட்டு லண்டனிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

18 - என்.டி.டி.வியின், 2007ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளருக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோன் சிங் வழங்கினார்.

- தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தடை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

19 - பெர்த் டெஸ்ட் போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது.

- சிராவயலில் நடந்த மஞ்சு விரட்டின்போது ரகளை செய்ததாக நடிகரும் அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரனுமான ரித்தீஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

21 - தீவிரவாதப் பாதையிலிருந்து விலகி அமைதிப் பாதைக்குத் திரும்புமாறு தனது தந்தை பின் லேடனுக்கு அவரது மகன் ஒமர் பின் லேடன் கோரிக்கை விடுத்தார்.

- மலேசிய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 தலைவர்களும் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

23 - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படும் என சட்டசபையில் ஆளுநர் அறிவித்தார்.

- செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அதை படம்பிடித்து வரும் ஸ்பிரிட் விண்கலம் (6 சக்கர ரோபோட்) அனுப்பிய படத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் போன்ற காட்சி இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

- விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த முக்கிய முகாமான எக்ஸ்ரே தளம் மீது குண்டு வீசியதாகவும், பிரபாகரன் மயிரிழையில் தப்பியதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்தது.

24 - சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

- ரஜினிகாந்த், விஜய்யைத் தொடர்ந்து சிம்புவும் இனிமேல் சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.

- தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், பஸ் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன.

25 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீதான சிறுதாவூர் நில மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணாவுக்கு லண்டன் கோர்ட், போலி பாஸ்போர்ட் வழக்கில் 9 மாத சிறைத் தண்டனை விதித்தது.

26- அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அரசே அதை நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

27 - முன்னாள் இந்தேனேசிய அதிபர் சுகர்தோ மரணமடைந்தார்.

28 - ஹைதராபாத் அருகே நடிகர் ராஜசேகர், அவரது மனைவி ஜீவிதா மற்றும் குழந்தைகள் மீது சிரஞ்சீவி ரசிகர்கள் கொலை வெறித் தாக்குதலை நடத்தினர். இதற்காக ராஜசேகர் வீட்டுக்கு நேரில் வந்து சிரஞ்சீவி மன்னிப்பு கேட்டார்.

- பலாலி ராணுவ தளத்திற்கு வந்த அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோதாபாயா ராஜபக்சே மீது விடுதலைப் புலிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். ஆனால் கோதாபாயா தப்பி விட்டார்.

- ஈழ தமிழ் இலக்கியத்தின் முன்னோடியும், பிரபல எழுத்தாளருமான செ.யோகநாதன் யாழ்ப்பாணத்தில் மரணமடைந்தார்

29 - இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீதான இனவெறி குற்றச்சாட்டை ஐசிசி மேல் முறையீட்டு ஆணையம் ரத்து செய்தது.

- உடற்பயிற்சி செய்தபோது மூக்கின் மீது எடைக் கல் விழுந்து நடிகர் தனுஷ் காயமடைந்தார்.

30 - சென்னையில் ரூ. 76.32 கோடி மதிப்பீட்டில் மத்திய செம்மொழி தமிழ் மையத்தை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

31 - நடிகை தேவயானிக்கு சென்னையில் 2வது பெண் குழந்தை பிறந்தது.

- விருத்தாச்சலம் நகர தேமுதிக ஒன்றிய செயலாளர் லெனின் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் கட்சித் தலைவர் விஜயகாந்த்.

அடுத்தது :
மறக்க முடியாத-2008 (பிப்ரவரி)

தங்கள் வருகைக்கு நன்றி !!!

இந்த வலைப்பூ இன்னும் கட்டமைப்பு பணியில் உள்ளது...

மீண்டும் வருக !!!

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?