த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

முந்தையது : மறக்க முடியாத-2008 (பிப்ரவரி)
மார்ச்:

1 - எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் மனைவியை இழந்த வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

2 - சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடியவர்களை தடுத்த தீக்ஷிதர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
4 - தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

5 - கர்நாடக முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான எஸ்.எம்.கிருஷ்ணா தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக மகாராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

6 - கிளிநொச்சியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் எம்.பி. சிவநேசன் கொல்லப்பட்டார்.

7 - பாமகவுக்கு ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்க இயலாது என்பதை முதல்வர் கருணாநிதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

8 - மலேசிய பொதுத் தேர்தலில் ஆளும் பாரிசன் தேசியக் கூட்டணிக்கு பெரும் அடி கிடைத்தது. சாதாரணப் பெரும்பான்மையுடன் அது வெற்றி பெற்றது. 8 முறை தொடர்ந்து வென்ற டத்தோ சாமிவேலு தோல்வி அடைந்தார்.

- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து, கொழும்புக்கு பெண் பைலட்டுகள், ஊழியைகள் இடம் பெற்ற விமானம் இயக்கப்பட்டது.

9 - உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில், வன்னிய கிருஸ்துவர்களுக்கும், தலித் கிருஸ்துவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள்.

- டெல்லி மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் அலுவலகத்தின் மீது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

- கண்டியில் நடைபெறுவதாக இருந்த சார்க் உச்சி மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டது.

- விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும், நடிகை ஷ்ரேயா ரெட்டிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

10 - மலேசிய பிரதமராக 2வது முறையாக அப்துல்லா அகமது படாவி பதவியேற்றார்.

- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரலாற்றிலேயே மோசமான விபத்தாக, அபுதாபி - துபாய் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர். 150க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து சேதமடைந்தன.

11 - போலி விசா மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற நடிகை புளோரா கைது செய்யப்பட்டார்.

14 - காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் அதிக காலம் நீடிக்கும் புதிய சாதனையையும் படைத்தார்.

- ஈவ் டீசிங்கில் சென்னை மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

- ஆசிப் அலி சர்தாரி மீதான கடைசி ஊழல் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

- இந்தியாவின் முதலாவது க்ரீன்பீல்டு விமான நிலையம் என்ற பெருமையைக் கொண்ட புதிய ஹைதராபாத் விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஷாம்ஷாபாத்தில் தொடங்கி வைத்தார்.

- அஜீத், ஷாலினி மகளுக்கு அனோஷ்கா என பெயர் சூட்டப்பட்டது.

15 - வக்கீல் ஜோதி அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்தார்.

16 - ஓகனேக்கலில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

- அகில இந்திய முஸ்லீம் பெண்கள் தனி நபர் சட்ட வாரியம், புதிய விவாகரத்து வழிமுறைகள் அடங்கிய 'ஷரியத் நிக்கநாமா'வை அறிவித்தது.

- இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தம்பியும், முன்னாள் அமைச்சருமான அனுரா பண்டாரநாயகே மரணமடைந்தார்.

17 - மலேசிய அமைச்சரவையில், 4 தமிழர்கள் இடம் பெற்றனர்.

- அமெரிக்கா செல்ல போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக கைதான நடிகை புளோராவுக்கு ஜாமீன் கிடைத்தது.

19 - திமுகவின் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸின் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், அதிமுகவின் பாலகங்கா ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

- நடிகர் ரகுவரன் மரணமடைந்தார்.

- பாகிஸ்தானின் முதல் பெண் சபாநாயகராக ‌பாமிதா மிர்சா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- பிரபல அறிவியல் நாவலாசிரியர் ஆர்தர் கிளார்க் உடல் நலக்குறைவினால் இலங்கையில் காலமானார்.

- வேலூர் சிறையில் நளினியை பிரியங்கா ரகசியமாக சந்தித்துப் பேசினார்.

20 - நடிகர் சோபன்பாபு மரணமடைந்தார்.

22 - திரைப்பட வசனகர்த்தா என்.பிரசன்ன குமார் புற்று நோயால் மரணமடைந்தார்.

23 - பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் முன்னாள் மனைவி செசிலியா சிகானர் அல்பெனிஸ், மொராக்கோவைச் சேர்ந்த தனது காதலரை நியூயார்க்கில் திருமணம் செய்து கொண்டார்.

25 - மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ராஜினாமா செய்தார்.

- பாகிஸ்தான் பிரதமராக சயீத் யூசுப் ரஸா கிலானி பதவியேற்றுக் கொண்டார்.

- அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

26 - முதல்வர் கருணாநிதி கோட்டைக்கு வந்த போது ஒரு முதியவர் வேட்டியை அவிழ்த்து விட்டு ஜட்டியுடன் ரோட்டில் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

27 - சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சென்னை அருகே உள்ள கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

29 - தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (பிளாட்), தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) மற்றும் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி ஆகியவை சேர்ந்து புதுக் கூட்டணியை அறிவித்தன.

- டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் 10,000 ரன்களைக் கடந்தார்.

- முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி, திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையானார். அவரது மனைவி ரித்துவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

30 - பிரபல முருகன் இட்லி கடை நிறுவனத்தின் சென்னை, திருச்சி, மதுரை நகர்களில் உள்ள கடைகள், உரிமையாளரின் இருப்பிடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

31- ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (ஏப்ரல்)

0 comments:

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?