த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

முந்தையது : மறக்க முடியாத-2008 (செப்டம்பர்)
அக்டோபர்:

1 - பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மரணமடைந்தார்.

2 - ரேஷன் கடைகளில் ரூ. 50க்கு பத்து சமையல் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

- பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

3 - மமதா பானர்ஜியின் தொடர் போராட்டம் காரணமாக சிங்கூரிலிருந்து வெளியேறுவதாக ரத்தன் டாடா அறிவித்தார்.

6 - இலங்கையில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் முன்னாள் ராணுவ தளபதி ஜனக பெரேரா, அவரது மனைவி உள்பட 26 பேர் பலியானார்கள்.

7 - பொருளாதார நெருக்கடியால், வேலையை இழந்த அமெரிக்கா வாழ் தமிழர் தனது மனைவி, 3 மகன்கள், மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

11 - இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

17 - இலங்கைப் பிரச்சினை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட 16 எம்.பிக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினர்.

19 - இலங்கையில் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் திரைப்படத் துறையினர் மாபெரும் போராட்டம் நடத்தினர்.

20 - பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் மரணமடைந்தார்.

23 - இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவைத் தலைவர் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டனர்.

24 - கடும் நெருக்கடியைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டனர்.

25 - புதிய திருப்பூர் மாவட்டம் உதயமானது.

26- மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

- இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சென்னையில் அறிவித்தார்.

28 - விடுதலைப் புலிகள் கொழும்பு அருகே விமானத் தாக்குதலை நடத்தினர்.

30 - அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 70 பேர் பலியானார்கள்.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (நவம்பர்)

0 comments:

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?