த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

ஜனவரி:
தேதி 1 - உ.பி மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

- இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தமிழ் எம்.பி. தியாகராஜய்யா மகேஷ்வரன் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

3 - சரத்குமாரின் புதிய கட்சித் தொடக்க விழா மாநாட்டுக்கான பந்தல் கால் மதுரையில் நடப்பட்டது. ராதிகா அடிக்கல் நாட்டினார்.

- விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

- அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

- அஜீத்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

4 - தேசியக் கொடிக்கு அருகே கால் வைத்திருந்ததாக டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா மீது போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

6 -விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் கர்னல் சார்லஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்) ராணுவத் தாக்குதலில் பலியானார்.

- ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய அணி, ஹர்பஜன் சிங் மீதான தடையை ஐசிசி நீக்கும் வரை சிட்னி நகரை விட்டு இந்திய அணி கிளம்பாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆஸ்திரேலிய டூரையும் அது சஸ்பெண்ட் செய்தது.

- சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு குஷ்பு வணக்கம் செலுத்ததால் சர்ச்சை எழுந்தது. கவிஞர் அறிவுமதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுடன் குஷ்பு கத்தி வாதிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாக்கு திருடிய திருடனைப் பிடித்த ஊர் மக்கள் அவரை சரமாரியாக அடித்து, ஜீப்பில் கட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று, கண்களில் ஆசிட் ஊற்றிக் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

- இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க தடை விதித்துள்ளதாக மலேசிய அரசு அறிவித்தது.

8 - கொழும்பு அருகே நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை தேச கட்டமைப்புத் துறை அமைச்சர் டி.எம் தசநாயகா பலியானார்.

- தவறான தீர்ப்புகளைக் கொடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்த சர்ச்சைக்குரிய நடுவர் ஸ்டீவ் பக்னர், இந்தியா - ஆஸ்திரேலிய தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

- மாலத்தீவு அதிபர் மாமூன் அப்துல் கயூமைக் கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. 15 வயது சிறுவன், அதிபரைக் காப்பாற்றினான்.

- கணவரை தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகவும், அவரை பார்க்க விடாமல் தடுப்பதாகவும் நடிகை ஷோபனா மீது நோய்டாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாலினி கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

9 - தொழிலதிபர் தன்னைக் கற்பழிக்க முயன்றாக கூறி ஓசூர் போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரிய நடிகை விந்தியாவின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.

10- டாடா குழுமத்தின் புரட்சி காரான ரூ.1 லட்சம் மதிப்புடைய டாடா நானோ டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

- நடிகர் பாண்டியன் (48) உடல் நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

- மதுரையை கலக்கி வந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் இன்று கைது செய்தனர்.

- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகத்திற்குள் வந்திருப்பதாக வதந்தி பரவியது.

- கன்னடர்களை புறக்கணிக்கும் ரயில்வேயின் போக்கைக் கண்டித்து பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகத்தின் பல ஊர்களில் ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் மீது கன்னட அமைப்பினர் வெறித்தனமான தாக்குதலை நடத்தினர்.

11 - ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

- கஞ்சா வழக்கில் ஆஜராகாமல் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

- சென்னை போலீஸார் தேடி வந்த மதுரை ரவுடி டாக் ரவி மதுரை, திருமங்கலம் கோர்ட்டில் சரணடைந்தார்.

- எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக ஏறி சாதனை படைத்த நியூசிலாந்தின் எட்மண்ட் ஹில்லாரி மரணமடைந்தார்.

13 - ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலலமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அலங்காநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

- சிவாஜி பட வெள்ளிவிழாவின்போது ஆபாச உடை அணிந்து வந்த நடிகை ஷ்ரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி போலீஸில் புகார் கொடுத்தது.

14 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

15 - ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து அலங்காநல்லூரில் துக்க பொங்கல் அனுசரிக்கப்பட்டது.

- நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

- இலங்கையின் மொனரகல்லா மாவட்டத்தில் பஸ் குண்டு விபத்தில் 24 பேர் பலியானார்கள்.

17 - எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு பெரும் இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக வருகிற ஜெயலலிதா சென்றார். எம்.ஜி.ஆர். குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

- பெர்த் டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே 600வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

- திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராஜுக்கு பணம் கேட்டு லண்டனிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

18 - என்.டி.டி.வியின், 2007ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளருக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோன் சிங் வழங்கினார்.

- தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தடை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

19 - பெர்த் டெஸ்ட் போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது.

- சிராவயலில் நடந்த மஞ்சு விரட்டின்போது ரகளை செய்ததாக நடிகரும் அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரனுமான ரித்தீஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

21 - தீவிரவாதப் பாதையிலிருந்து விலகி அமைதிப் பாதைக்குத் திரும்புமாறு தனது தந்தை பின் லேடனுக்கு அவரது மகன் ஒமர் பின் லேடன் கோரிக்கை விடுத்தார்.

- மலேசிய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 தலைவர்களும் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

23 - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படும் என சட்டசபையில் ஆளுநர் அறிவித்தார்.

- செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அதை படம்பிடித்து வரும் ஸ்பிரிட் விண்கலம் (6 சக்கர ரோபோட்) அனுப்பிய படத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் போன்ற காட்சி இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

- விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த முக்கிய முகாமான எக்ஸ்ரே தளம் மீது குண்டு வீசியதாகவும், பிரபாகரன் மயிரிழையில் தப்பியதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்தது.

24 - சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

- ரஜினிகாந்த், விஜய்யைத் தொடர்ந்து சிம்புவும் இனிமேல் சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.

- தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், பஸ் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன.

25 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீதான சிறுதாவூர் நில மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணாவுக்கு லண்டன் கோர்ட், போலி பாஸ்போர்ட் வழக்கில் 9 மாத சிறைத் தண்டனை விதித்தது.

26- அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அரசே அதை நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

27 - முன்னாள் இந்தேனேசிய அதிபர் சுகர்தோ மரணமடைந்தார்.

28 - ஹைதராபாத் அருகே நடிகர் ராஜசேகர், அவரது மனைவி ஜீவிதா மற்றும் குழந்தைகள் மீது சிரஞ்சீவி ரசிகர்கள் கொலை வெறித் தாக்குதலை நடத்தினர். இதற்காக ராஜசேகர் வீட்டுக்கு நேரில் வந்து சிரஞ்சீவி மன்னிப்பு கேட்டார்.

- பலாலி ராணுவ தளத்திற்கு வந்த அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோதாபாயா ராஜபக்சே மீது விடுதலைப் புலிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். ஆனால் கோதாபாயா தப்பி விட்டார்.

- ஈழ தமிழ் இலக்கியத்தின் முன்னோடியும், பிரபல எழுத்தாளருமான செ.யோகநாதன் யாழ்ப்பாணத்தில் மரணமடைந்தார்

29 - இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீதான இனவெறி குற்றச்சாட்டை ஐசிசி மேல் முறையீட்டு ஆணையம் ரத்து செய்தது.

- உடற்பயிற்சி செய்தபோது மூக்கின் மீது எடைக் கல் விழுந்து நடிகர் தனுஷ் காயமடைந்தார்.

30 - சென்னையில் ரூ. 76.32 கோடி மதிப்பீட்டில் மத்திய செம்மொழி தமிழ் மையத்தை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

31 - நடிகை தேவயானிக்கு சென்னையில் 2வது பெண் குழந்தை பிறந்தது.

- விருத்தாச்சலம் நகர தேமுதிக ஒன்றிய செயலாளர் லெனின் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் கட்சித் தலைவர் விஜயகாந்த்.

அடுத்தது :
மறக்க முடியாத-2008 (பிப்ரவரி)

0 comments:

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?