த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

விரைவில் .....


















நீங்க சொல்ல நினைக்கிறதா கமெண்ஸ்ல சொல்லுங்க....


"தமிழ்நாடு ஹீரோ வாங்க' என தன்னை காங்.,தலைவர் சோனியா அழைத்தது பெருமையாக இருந்தது என வீர தீர செயலுக்காக டில்லி குடியரசு தின விழாவில் விருது பெற்ற தமிழக சிறுவன் மருதுபாண்டி தெரிவித்தார். திண்டுக்கல் தோமையார்புரம் கிழக்கு காலனியை சேர்ந்த முருகேசன் மகன் மருதுபாண்டியன். 8ம் வகுப்பு மாணவரான இவர், கடந்த ஆண்டு ஜூன் 26 அன்று காலை தனது ஒன்றரை வயது தங்கை ரேவதிக்கு ரயில் செல்வதை வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார்.

காலை 7.45 மணியவில் மதுரையிலிருந்து சென்ற வைகை எக்ஸ்பிரஸ், மருதுபாண்டி வீடு இருந்த பகுதியை கடந்து சென்றது. கடைசி பெட்டி சென்றவுடன் 3 அடி நீளத்திற்கு தண்டவாளம் பெயர்ந்து தூக்கி வீசப்பட்டது. அருகில் உள்ள ரயில்வே கேட்டிற்கு சென்று தகவல் கூறி விட்டு சிறுவன் திரும்பிய போது திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட மருதுபாண்டி தனது தங்கையின் சிவப்பு கவுனை கொடிபோல் காட்டி ரயிலை நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தை தவிர்க்க உதவிய சிறுவன் மருதுபாண்டி அகில இந்திய அளவில் வழங்கப்படும் வீர தீர செயலுக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.



விருதை பெற, ஜன., 16 ல் டில்லிக்கு பெற்றோர் மற்றும் தங்கையுடன் சென்றார்.டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய அமைச்சர்கள் அந்தோணி,ரேணுகா சவுத்திரி,டில்லி கவர்னர் ஆகியோர் இவர்களை பாராட்டி பரிசு வழங்கி விருந்தளித்துள்ளனர். காங்., தலைவர் சோனியாவை சந்தித்த போது,"தமிழ்நாடு ஹீரோ வாங்க' என்று தமிழிலேயே மருதுபாண்டியை அழைத்துள்ளார்.தொடர்ந்து துணை ஜனாதிபதி அன்சாரி பதக்கம் மற்றும் சான்றிதழை அளித்துள்ளார். விருது பெற்ற பின் ஜனாதிபதி பிரதீபாபாட்டிலை சந்தித்து சிறுவர்கள் அனைவரும் வாழ்த்துபெற்றுள்ளனர்.குடியரசு தின விழா அணிவகுப்பை காண விருது பெற்ற சிறுவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

டில்லி அனுபவம் குறித்து மருதுபாண்டி கூறியதாவது: காங்., தலைவர் சோனியா என்னை "தமிழ்நாடு ஹீரோ வாங்க' என்று அழைத்தது பெருமையாக இருந்தது. பல தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி. தமிழகத்தில் இருந்து சென்ற ஆண்டு யாரும் இந்த விருதுக்கு தேர்வாகவில்லை என தெரிவித்தனர். குளிர் கடுமையாக இருந்தது. ரயில்வே அமைச்சர் லல்லுபிரசாத்தை சந்திக்காதது தான் வருத்தம். சிறுவயதிலேயே பொதுநலத்தோடு செயல்பட்டால் எனக்கு கிடைத்தது போல் அங்கீகாரம் அனைவருக்கும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி ; தினமலர்



அன்றைய பொங்கல் தினம் திரு.ராமகிருஷ்ணன் (சென்னை - IIT முன்னால் மாணவர்) அவர்களுக்கு வித்தியாசமாய் அமைந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் கிராமம் - வறண்ட தமிழகபகுதிகளில் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு ஆண்டுக்கு அதிக பட்சம் ஒன்பது நாட்கள் மட்டுமே மழை பெய்யுமாம்.

ஆனால் இன்று, திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் தீவிர முயற்சியால் இக்கிராமத்தில் உள்ள முன்று குளங்களில் சுமார் ஏழு மில்லியன் லிட்டர் தண்ணீர் உள்ளது.

இக்கிராமத்துடனான இவரது உறவு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது. இன்று இக்கிராம மக்கள் இவரை தங்கள் குடும்ப உறுப்பினராகவே பார்க்கின்றனர்.

டிசம்பரில் சென்னையில் நடைப்பெற்ற IIT கான்பிரன்சிற்க்கு வந்த முன்னால் IIT மாணவர்கள் அனைவரயும் இக்கிரமாத்திர்க்கு வரவழைத்து அவர்ககளுக்கு பொதுச்சேவை செய்ய ஒரு உந்துதலை ஏற்படுத்தியுள்ளார்.


ஜெயம் ரவியின் அண்ணனும், வெற்றிப் பட இயக்குநருமான ஜெயம் ராஜா, அடுத்து விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.

கோலிவுட்டின் ஹாட் செய்தியே இதுதான். இப்படம் விஜய்யின் 50வது படம் என்பது கூடுதல் விசேஷம். விஜய்யே இந்தப் படத்தையும் தயாரிக்கவும் செய்கிறார் என்பது போனஸ் செய்தி.

விஜய்யின் பொன் விழா படத்தை சித்திக், தரணி ஆகியோரில் ஒருவர்தான் இயக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஜெயம் ராஜா, விஜய்யை இயக்கப் போகிறார் என்ற செய்தியால் கோலிவுட் சர்ப்ரைஸில் ஆழ்ந்துள்ளது.

ஆனால் ஜெயம் ராஜாவின் வெற்றிகரமான இயக்கத் திறமையால்தான் அவரை விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜா தொடர்ந்து நான்கு மெகா ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவர் இயக்கியதே இந்த நான்கு படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா கடைசியாக இயக்கிய படம் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம்.

விஜய்யை வைத்து ராஜா இயக்கப் போகும் படம் வழக்கம் போல ரீமேக் படமா அல்லது சொந்தக் கதையா என்பது குறித்து தெரியவில்லை. காரணம், ராஜாவின் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களுமே ரீமேக் என்பதால்தான்.

அதேசமயம், விஜய்யும், ரீமேக் படங்களில்தான் பெருமளவில் வெற்றிகளைக் குவித்துள்ளார் என்பதால் இருவரும் இணையும் இப்படமும் நிச்சயம் ரீமேக் படமாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இதுவரை தம்பியை வைத்து மட்டுமே இயக்கி வந்த ராஜா முதல் முறையாக இன்னொரு நடிகரை, அதுவும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் நடிகரை வைத்து இயக்கப் போகிறார்.


ராஜாவின் திரைப்பட இயக்கத் திறமை குறித்து அறிந்துள்ள விஜய், அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

நன்றி: தட்ஸ்தமிழ் டாட் காம்


//அரசியல் ஒரு கடல், இறங்குவது சுலபமல்ல: விஜய்//

என்ன கொடுமை சார் இது. நடிக்க வராங்க, பட்டம் வைச்சுகுறாங்க, மன்றம் ஆரம்பிக்குறாங்க... அதுவும் அகில இந்திய மன்றம்ன்னு சொல்றாங்க...., நல திட்டம்ன்னு சொல்லி ரென்டு சைக்கிள் குடுக்குறாங்க......... நாலு பேருக்கு சாப்பாடு போடறாங்க......... உடனே அரசியலுக்கு வந்துடறாங்க............, கடைசில்ல ஒண்ணுமே இல்லாம போயிடறாங்க........... இவரோட மொத்தம் அம்பது படத்துல்ல சூப்பர் படம்ன்னு பாத்தா பத்து படம் தான்.... அதுவும் கதைக்காக ஒடின படம் தான்; அதுக்குள்ள முதல் அமைச்சர் ஆசை வந்துடுது. ஒரு எம்ஜிஆர் தான் இருக்க முடியும் தயவு செய்ஞ்சு புரிஞ்சுகோங்க;



---இப்படிக்கு
யாரோ

நன்றி : தட்ஸ்தமிழ் டாட் காம்

அல்டிமேட் ஸ்டார் அஜித்+அழகு தேவதை ஷாலினி+குட்டி தேவதை அனுஷ்கா கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியிலிருந்து சில படங்கள் இங்கே..












மேல் அதிக படங்களுக்கு : http://www.starajith.com/media_display.php?id=1100

கீழே உள்ள படம் பார்த்ததும் ஏதோ சொல்ல தோனுது இல்ல.. மறக்காம கமெண்ட்ஸ்- சொல்லிட்டு போங்க...
இது ஒரு அவார்ட் வின்னிங் போட்டோங்க...

டிராபிக்கில் மாட்டினால் கட்ட வேண்டிய கட்டணம் - ஒரு தொகுப்பு

LIST OF TRAFFIC OFFENCES, SECTION OF LAW AND FINE AMOUNT
Government Order No.HTD/44/TMA/2000 Dated 03.07.2000.

SL NO. TRAFFIC OFFENCES SECTION OF LAW FINE AMOUNT
01. Dangerous Drive M.V.Act 184 Rs.300-00
02. Over Speeding M.V.Act 183 Rs.300-00
03. Over Load M.V.Act 113 Rs.100-00
04. Drunken Drive M.V.Act 185 Court Fine
05. Refuse to Go For Hire 16 Class (P) Rs.200-00
06. Demanding Excess Fare 16 Class (J) Rs.200-00
07. Defective Fare Meter 16 Class (K) Rs.100-00
08. Defective Silencer 16 Class 120 Rs.100-00
09. Emitting Black Somke 190 Class (2) Rs.300-00
10. Shrill Horn 190 Class (2) Rs.100-00
11. Without Permit 190 Class 192 Court Fine
12. Without Driving License 190 Class 3/1 Rs.300-00
13. Jumping Traffic Signal 190 Class 119 Rs.100-00
14. Wrong Parking 190 Class 117 Rs.100-00
15. Cutting Yellow Lane/Lane Discipline 190 Class 119 Rs.100-00
16. Defective Number Plate 190 Class 50 Rs.100-00
17. No Entry 190 Class 115 Rs.100-00
18. H.T.V. Prohibited 115 R/w 177 Rs.100-00
19. Without Uniform 14 R/w 177 Rs.100-00
20. Without I.C 14 R/w 106 Rs.500-00
21. Without F.C 14 R/w 56 Court Fine
22. Defective Head Light 14 R/w 106 Rs.100-00
23. Without Tail Light 14 R/w 250 Rs.100-00
24. Footboard Traveling 94 Class (2) Rs.100-00
25. Gents Traveling Ladies Seat in BMTC Bus 94 Class (4) Rs.100-00
26. Using Mobile Phone while Driving ----- Rs.100-00
27. Driving without wearing Seat Belt ----- Rs.100-00

KARNATAKA POLICE ACT & KARNATAKA TRAFFIC ACT

01. Footpath Vendor 92 (G) Court Fine
02. Stray Cattle 92 (e) Court Fine
03. No Entry for Cycle 92 (b) Court Fine
04. without Light for Cycle 92 (a) Court Fine
05. Jay Walker Rule 6, 18 K.T.C.Act Court Fine

மூலம் : http://125.17.140.50/trafic_spot_fines.htm





பிப்ரவரி 22 ம் தேதி நடைபெறவுள்ள 81 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஒட்டி சற்று முன் அனைத்து பிரிவுகளிலும் பரிந்துரைப்புகள்(Nomination) வெளியிடப்பட்டுள்ளன.A.R.ரஹ்மான் சிறந்த இசையமைப்பு, சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Slumdog Millionaire படத்திற்காக சிறந்த இசையமைப்பு பிரிவின் கீழ் ஒரு முறையும், சிறந்த பாடல் பிரிவின் கீழ் இரண்டு பாடல்களுக்காக (இரண்டும் Slumdog Millionaire படத்திலிருந்து)இரு முறையும் என மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.Slumdog Millonaire திரைப்படம் சிறந்த திரைப்படம்,இயக்குனர்,ஒளிப்பதிவு,எடிட்டிங்,ஓலிப்பதிவு எடிட்டிங்,ஒலி இணைப்பு,திரைக்கதை என்ற பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படமான ஸ்லம்டாக் மில்லியனர், உலக அளவில் பேசப்படும் திரைப்படமாக உருமாறி உள்ளது. மும்பை குடிசைப் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற இளைஞன் ஒருவன் (டீ பாய்) கோன்பனேகா குரோர்பதி போன்ற டிவி பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லி பல கட்டங்களைக் கடந்து கோடீஸ்வரன் ஆவதே கதை.

லண்டனைச் சேர்ந்த டேனி போய்லே என்பவர் இயக்கிய இந்தத் திரைப்படத்தில் அனில் கபூர், தேவ் படேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடலின் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடந்த வாரத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இது ஆஸ்கர் விருதுக்கான முன்னோட்டம் எனக் கூறப்பட்டது.

அதற்கேற்றவாறு தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் 3 விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை (சைமன்), சிறந்த படத்தொகுப்பு, சவுண்ட் எடிட்டிங் மற்றும சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் உள்பட மொத்தம் 10 பிரிவுகளில் இந்தத் திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவின்போது ஸ்லம்டாக் மில்லியனருக்கு எத்தனை விருதுகள் கிடைக்கும் என்பது தெரியவரும்.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ”இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இறைவன் கருணையாலும், மக்களின் பிரார்த்தனையாலும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்லது நடந்துள்ளது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.



மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.

http://www.oscars.org/awards/81academyawards/nominees.html



நன்றி :

பொங்கலுக்கு ரிலீஸான `வில்லு' ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்கு விசிட் அடிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜய். இந்த திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசுகிறார். (எல்லா டி.வி -லயும் பேட்டி கொடுத்து பாத்தாச்சி.. ஆனா தியட்டேர்ல கூட்டம் தான் காணோம்; அதான் அண்ணாத்த நேர theatreke போய் கூட்டம் சேக்கிறார் போல...)

முதல்கட்டமாக நேற்று அவர் கோவை சென்றார். ரசிகர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.கோவை கங்கா, கே.ஜி.காம்ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார். அவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:

நான் இதுவரை நடித்த படங்களில், முதல் 10 நாட்களில் அதிக வசூல் செய்த படம், `வில்லு'தான்.(அப்பா 'கில்லி' வசூல் எல்லாம் எந்த கணக்கு...) கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் இதுவரை என் முந்தைய படங்கள் செய்திராத வசூல் சாதனையை வில்லு செய்து இருக்கிறது.(அப்படி என்ன உலக சாதனை பண்ணிடுச்சு?? )

அதனால் அந்த தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்திக்க தோன்றியது. இன்று கோவை வந்திருக்கிறேன். இதையடுத்து பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கும் செல்வேன்.(உசார் மக்கா... உசாரு.... )

இந்த வெற்றியை, ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் முதல் படத்திலிருந்து இதுவரை எனக்கு ஆதரவு அளித்து வருகிறீர்கள். இந்த ஆதரவு எனக்கு எப்போதும் வேண்டும்.(நீங்க CM ஆகிரவரைக்கும்தானே..) உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும் எப்போதும் மாறாது என்றார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: வில்லு படம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறதே?

விஜய்: எல்லா படங்களுக்கும் இதுபோன்ற வதந்திகள் வரத்தான் செய்யும். அதை நாம் கண்டுக்கவே கூடாது. அதையும் தாண்டி ஜெயிக்கணும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். (இப்ப புரியுதா theatre விசிட்டோட நோக்கம் என்னன்னு...)

கேள்வி: அடுத்த படம் எப்போது?

பதில்: என் அடுத்த படம், வேட்டைக்காரன். ஏவிஎம் தயாரிக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும். (அயன் போல இந்த படமும் AVM - சன்னிற்கு வித்துடுமன்னு கேட்டு சொல்லுங்க...)

நன்றி : thatstamil.com

“நமக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அது தானா கிடைக்கும்” - அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள்!

சூப்பர் ஸ்டார் நாற்காலியை அடையாமல் விடமாட்டேன்…” என்று ஒரு காலத்தில் மனம் போனபடியெல்லாம் பேட்டி கொடுத்துகொண்டிருந்த அஜீத் இன்று அடக்கத்தின் சிகரமாய் காணப்படுகிறார். தேவையின்றி பத்திரிக்கைகளில் பேசுவதில்லை. யாருக்கும் சவால் விடுவதில்லை. தான் பாட்டுக்கு தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்த மாற்றம் அவருள் எப்படி நிகழ்ந்தது?

இது பற்றி முன்னமே உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும், நண்பர்களின் தளங்களில் படித்திருப்பீர்கள். இருப்பினும் அது ஒரு ஆச்சரியமான விஷயம் என்பதால் ஒரு சிறிய ரீவைண்ட். “சூப்பர் ஸ்டார் கற்கும் பாடம்” பற்றிய பதிவில் நண்பர் ஒருவர் அளித்த கமெண்டை பார்த்த பிறகு எனக்கு இது தோன்றியது. பிற்சேர்க்கையாக தரவேண்டியதை அப்படியே ஒரு தனி பதிவாக தருகிறேன்.


அஜீத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த அஜீத்திடம், பில்லா ரீமேக் ஐடியாயாவை சிலர் கூறினார்கள். இதையடுத்து சூப்பர் ஸ்டாரிடம் அனுமதி கேட்டு அவரின் ஆசி பெறுவதற்கு அவரை நேரில் சந்தித்தார் அஜீத்.


சூப்பர் ஸ்டாரும் அஜீத்தை பரிவுடன் உபசரித்து, பில்லா ரீமேக்கிற்கு ஒப்புதலும் ஆசியும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல், “Living with Himalayan Masters” என்ற புத்தகத்தையும் பரிசளித்தார். (திரையுலகில் சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலருக்கு ரஜினி இந்த புத்தகத்தை பரிசளித்திருக்கிறார் தெரியுமா?)

பின்பு அஜீத்திடம், “நமக்குன்னு எது விதிக்கப்பட்டிருக்கோ அது நமக்கு தவறாம கிடைக்கும். அதனால் நாம் எதுக்கும் அலட்டிக்கவோ கவலைப்படவோ கூடாது. நம்ம வேலைய நாம பாட்டுக்கு செஞ்சிகிட்டு போய்கிட்டே இருந்தா போதும். மத்தது தானா நடக்கும்” என்றார்.


மனநிறைவுடன் வீடு திரும்பிய அஜீத், ரஜினி பரிசளித்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். முதலில் புத்தகத்தை ஆர்வமின்றி படிக்க துவங்கிய அஜீத் பிறகு, பக்கங்களை புரட்ட புரட்ட அசந்தேபோய் விட்டார். அவருக்கு தேவை எதுவோ அது அந்த புத்தகத்தில் கிடைத்தது. புத்தகத்தை முடித்த போது அவர் முழுதும் மாறிவிட்டிருந்தார். “இந்த மாற்றத்திற்கு காரணம் ரஜினி சார் தான்” என்றும் வெளிப்படையாக கூறினார்.

வாழ்க்கையிலும் கேரியரிலும் சூப்பர் ஸ்டார் கூறியதை ஓரளவு பின்பற்ற துவங்கினார். அவர் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தது. பில்லா சூப்பர் ஹிட்டானது. அஜீத் தந்தையானார். (பில்லா ரிலீசின்போது தொலைக்காட்சிகளில் விரிவான பேட்டியளித்தார் அஜீத். அதில் சூப்பர் ஸ்டார் பற்றியும் அதில் நிறைய பேசினார்.)


அஜீத்தின் குழந்தையின் பெயர் அனுஷ்கா. பார்க்க அச்சு அசலாக அஜீத் போலவே இருக்கும் அந்த குட்டி தேவதைக்கு தற்போது ஒரு வயது நிரம்பி இரண்டாம் வயது ஆரம்பித்துவிட்டது.

இப்போது இந்த அஜீத் அதிகம் பேசுவதில்லை. பில்டப்புகளில் ஈடுபடுவதில்லை. இந்த அஜீத்தை அனைவருக்கும் பிடித்திருக்கிறது.

திருவள்ளுவர் கூறுவது போல,

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் - குறள்

பொருள்: “அறிவிலும் அனுபவத்திலும் தம்மிலும் சிறந்த பெரியோரை போற்றி, மதித்து, தமது நட்பாக்கிகொள்ளுதல் என்பது பெறுவதற்ககரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரியது”

சூப்பர் ஸ்டாருடன் இவரது அணுகுமுறை விஷயத்தில் இந்த குறள் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி: OnlyRajini.com (சிம்பிள்_சுந்தர்)

இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகப் போகும் நான் கடவுள் திரைப்படத்தை எதிர்க்க இப்பவே தயாராகி கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிக கண்மணிகள்...

ஏற்கனவே சில இந்துத்துவா அமைப்புகளின் எதிர்ப்புகளை சமாளித்து ரிலீஸ் ஆகும் நான் கடவுளுகு புதிய பிரச்சினை ரெடி..

அஜித்துக்கும் நான் கடவுளுக்கும் உள்ள தொடர்பை பார்க்க ஒரு ஃப்ளாஸ்பேக் ...


2006 - ஆண்டு தொடக்கத்தில் நான் கடவுள் படம் அஜித் தடிப்பில் உருவாக இருந்தது.. 'அஜித் - பாலா' காம்பினஷன் கோலிவுட் - இல் பரபரப்பாக பேசப்பட்டது... இந்த படத்திற்காக அஜித் நீண்ட தலை முடி வளர்த்து வந்தார். (அந்த முடியுடன் தான் வரலாறு , பரமசிவன் , திருப்பதி போன்ற படங்களிலும் நடித்தார்) . மே மாதம் தொடங்கவேண்டிய படபிடிப்பு தொடங்கவில்லை.. ரொம்ப நாள் வெயிட் பண்ணி பார்த்த அஜித்; இனி இது ஒத்து வராது என எண்ணி பாலா-விடம் பேசி விட்டு படத்திலிருந்து விலகி கொண்டார்..

இதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது..


அஜித்தை ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார் பாலா.. ஹோடேலில் காத்திருந்த அஜித்திற்கு அதிர்ச்சி... பாலா, தன்னுடன் சில தயாரிப்பு நிவாகிகள் , விநியோகஸ்தர்கள் புடை சூழ வந்து.. அஜித்திடம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் இப்பவே காட்ட சொல்லி காட்டமாக நடந்துகொண்டனர்; பணம் கட்டினால் தான் வெளியே போக முடியும் என எச்சரித்தனர்
பாலா கோஷ்டியினர்; இதை முற்றிலும் எதிபார்க்காத அஜித் மிகவும் அதிர்த்து போனார். (பணச்சிக்களில் மாண்டிகொண்டு பாடபிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு தன் சொந்த பணத்தில் உதவி புரிந்துள்ளார் அஜித் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ...)



லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட 'அஜித்'திற்கே இந்த நிலைமையா? என யோசித்த மற்ற நடிகர்கள் இதில் உடனடியாக 'நடிகர் சங்கம்' நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்; புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என அதன் தலைவர் அறிக்கை கொடுத்தார்; இதை பெரிய பிரச்சினையாக்க விரும்பாத அஜித் புகார் கொடுக்காமல் பிரச்சினைக்கு அப்போது முற்று புள்ளியிட்டார்..

இந்த காட்டுமிராண்டி தனத்தை கேள்வி பட்ட அஜித் ரசிகர்கள் கொந்தளித்தனர். சென்னையில் பாலா அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினர்; போலீஸ் வந்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை; பின்னர் அஜித்தின் வேண்டுகோளுக்கு இணங்க அப்போது சமாதனமாயினர்.. ஆனால் பாலா-வின் 'நான் கடவுள்' ரிலீஸ் ஆகும் போது பார்த்துகொள்ளலாம் என நினைத்து ரசிகர்கள் சமாதனமாயினர் என்பதே உண்மை...



இப்போது 'நான் கடவுள்' ரிலீஸ் ஆக உள்ளதால்; Revenge' எடுக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர்... என்ன மாதிரியான 'Revenge' என்பது போக போகத் தான் தெரியும்...

எனக்கு ஈமெயில் மூலம் வந்த தகவல் இது ...

(மொழி பெயர்க்க நேரமின்மையால் அப்படியே உங்களுக்கு வழங்குகிறேன்...)

A letter from Satyam Employee

Dear All,

I (Satyam Employee) am deputed at client location and came across a very interesting conversation in cafeteria yesterday.

One of my co-worker, also deputed with the same client through some lesser known two room company, mustered guts to ask me sarcastically in front of entire team, "So, Satyam is gone! What are you guys planning to do now?" In normal circumstances, I have a habit to not to reply to lose talks, but in front of entire team.... I thought I need to fix this guy's thought process. I asked him, as my military training has imbibed in me the habit to fight till last breadth, "Who says Satyam is gone when I am very much alive here and committed to create value on behalf of my company?". He shot back, "Hello Mr., your chairman has resigned, you guys are facing financial turbulence and you still have a face to say that Satyam is not gone!"

At this juncture, I thought of replying to this guy in his own language. I asked him, "Tell me, what will you do and where will you go if our country India was not there?"

He was not prepared for this level of thought and asked back, "What a stupid question, How can India be gone, it is a country?" I asked him back, "Country! What makes a country? Land? Economy? Our Prime Minister? Our President? Our Geography? Or the PEOPLE? If our PM resigns, will you say India is gone? If our economy faces a slowdown, will you say India is gone? But yes, if the people of a country are lost for any reason, we will say that country has no meaning.

Who cares of vast land of Antarctica today which has just one permanent resident, Father Georgy? Which country does it belongs to? Why does not it has any government? Why does not it has any economy? Or, how many countries were there when humans used to hunt for food in pre-historic times?

Countries, Wealth, Infrastructures and booming economies are nothing but creations of efforts of PEOPLE, and they do not have any existance on their own. And the final blow was, "When one man can create Satyam as an organization of 53,000 people,
why not 53,000 committed people can rebuild one SATYAM?"

இன்னும் 53,000 பேர் சத்யம்ல இருக்காங்களா?

“Have you been to states before” ?
“No, Haven’t yet”. (
எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
“Any other country” ?
“No”.
“What are you man, You have enough experience..Should have been to onsite atleast once”
“yeah…I could have been… But…”
-இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க..

அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க? நமகெங்க….எழவு அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்கன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க..

ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!
-சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பறை அளபறைய குடுத்திட்டிருப்பாங்க

ஆன்சைட் - மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யாவசியமான ஒரு வார்த்தை.

சரி ஆன்சைட்னா என்னாங்க?

ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. வெள்ளக்காரன் தான் நமக்கெல்லாம் படி அளக்கற சாமி, அவனுக்கு ஒரு வேலை ஆகனும்னாஇந்த மாதிரி இந்த மாதிரி வேலை ஆகனும்னு அவன் டெண்டர் மாதிரி விடுவான். உடனே நம்மூர்ல இருக்கற கம்பெனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு புடிச்சுஎனக்கு செய்னு, எனக்கு மோதரம்னுமன்னன் படத்துல ரஜினி கௌண்டமணி மாதிரி கெடைக்கற பீஸ் ஆப் ப்ரொஜெக்ட வெச்சுகிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்ட்டுக்கு பூஜைய போட்ருவாங்க…. அது 20 பேரு செஞ்சு முடிக்கற வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனுக்கு என்னென்ன வேணும்னு பக்கத்துலையே இருந்து விசாரிச்சிட்டு அங்கிருந்துட்டே நம்மூர்ல இருக்கற ஒரு 8 பேர் கிட்ட வேலைய (உயிரை) வாங்கற process தான் Onsite-Offshore co-ordination.

இந்த ரெண்டு க்ரூப்க்கும் மாமியார் மருமக மாதிரி எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இவன கேட்டா அவன் ஓபி அடிக்கறாம்பான், அவன கேட்டா இவன் ஓபி அடிக்கறாம்பான் கடைசி வரைக்கும் சித்தி சீரியல்ல வர்ற சாரதா, பிரபாவதி மாதிரி பொகஞ்சுகிட்டே இருப்பாங்க..
இப்ப
அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கறதுதான் இங்க மேட்டர்

அப்படி போறதுனால என்னங்க

நல்லா கேட்டிங்க….

** இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கறத அங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிரலாம்!

** நம்ப negotiation skills ம், business communication ம் நல்ல இம்ப்ரூவ் ஆகும்!

** நமக்கு வேலை ரீதியாவும், சமுதாய(கல்யாண சந்தை) ரீதியாவும் நல்ல மரியாதை கெடைக்கும்.

** இங்க நம்ம உருவகமா பார்த்து தெரிஞ்சுகிட்ட பல விசயங்கள அங்க உருவமா பார்க்கலாம்அட, நான் வேலை சம்பந்தமாதாங்க சொல்றேன்.

அப்பறம் பெருசா ஒன்னுமில்லீங்க, நம்பளும் இந்த ஈபில் டவர், லண்டன் பிரிட்ஜ், பிரமிட், சுதந்திரதேவி சிலை, பைசா கோபுரம் இந்த மாதிரி பல எடங்கள்ல சம்பரதாயமா நின்னு கேமராவ மொறைச்சு பார்த்து பல ஸ்டில்லுகல எடுத்து மொத வேலையா ஆர்குட்லயோ, பிக்காசலயோ போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான்

இங்க அவனவன் 38 degree வெயில்ல காஞ்சிட்டு இருப்பான் அங்க நம்பாளு சுவிஸ்ல ஜெர்கின போட்டுட்டு snow fall வெளயாடறா மாதிரி போட்டோவ போட்டு பொகைய கெளப்புவான்.

மொத்தத்துல மேனேஜ்மென்டை பொறுத்த வரை ஒரு resource ஆன்சைட் அனுபறதுங்கறது பொம்பள புள்ளைய கட்டிக் குடுக்கற மாதிரி

மூத்தவ நல்லா பாடுவா, சமையல் சுமாராத்தான் பண்ணுவா….போக போக பழகிரும்மத்த படி போற எடத்துல எப்படி இருக்கணும்னு சொல்லி வளத்திருகங்கற மாதிரிஇவருக்கு ஆன தெரியும் குதர தெரியும்னு கிளையன்ட் கிட்ட சொல்லி எப்படியாவது ஆன் சைட் அனுப்பிருவாங்க.
அதெப்டிங்க
பெரியவள வீட்ல வெச்சுகிட்டு சின்னவள கட்டி குடுத்தா ஊரு தப்பா பேசாதுங்களாங்கறா மாதிரி சீனியர் resourse வெச்சு கிட்டு ஜூனியர் resourse யும் ஆன்சைட் அனுப்ப மாட்டாங்க

ப்ராஜெக்ட் வந்ததுக்கப்புறம் போன்ல கூப்பிட்டுநம்ப கிட்ட ஏற்கனவே குழாய்வழியா (Pipeline ) இருந்தவருமோவராதோப்ராஜெக்ட் வந்திருக்கு. நீங்க கெளம்பறதுக்கு தயாராகிகோங்கன்னு ஒரு 10 பேரு கிட்ட தனித்தனியா சொல்லுவாங்க, இவனுகளும் நெசமாத்தான் சொல்றியானு ஆனந்தி மாதிரி கேட்டுக்கிட்டு, உடனே ஷாட்ட இங்க கட் பண்ணி ஃபாரின்ல ஓபன் பண்ணிருவானுக. ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலயே நடக்க மாட்டானுக. பில்லா படத்துல வர்ற மாதிரி ரீ-ரெகார்டிங் இல்லாமையே நடப்பானுக, திரும்புவானுக, பாப்பானுக. மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால வேறு ஒருத்தர் போறாரு நீங்க கொஞ்ச நாளைக்குஏங்கடாபோங்கடாப்ரொஜெக்ட கன்டினியூ பண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம் தான் “I am Back” ன்னு தரைக்கே வருவாங்க..அப்பறம் கொஞ்ச நாளைக்குவார்த்தை தவறிவிட்டாய்ன்னு ஸ்லோ மோஷன்ல நடக்க ஆரம்பிச்சிருவானுக!! ..

ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே, எல்லார் வாயிலையும் அவுல போட்ட மாதிரி ஆயிரும்…. அவன் போவான் இவ போவான்னு எல்லாரும் கெழக்க பார்த்திட்டு இருந்தா மேக்க ஒருத்தன் மொதல்லையே கெளம்பி போயிருப்பான்

மேல இருக்கறவங்க, முதல்வன்ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது ஒரு தொலை நோக்கு பார்வையோட பாத்து ஒரு பொதுவான முடிவாத்தான் எடுப்பாங்க… “ஒன் டே squad ரெய்னாவுக்கு பதில கைப்ப எதுக்கு எடுத்தாங்கங்கற மாதிரி ஆக்ரோசமா ஆறு நாளைக்கு அத பத்தி பேசிட்டு அதுக்கப்றம் ஆறாவது நாள் அவங்கவங்க வேலைய அமைதியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.

ஆன்சைட் போனவன்அக்கறை சீமை அழகினிலே”, நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்பாடிக்கிட்டு அந்த கெத்த அப்படியே மெயின்டையின் பண்ணிகிட்டிருப்பான்….நம்பாளுசொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”, “இந்திய நாடு நம் நாடு இந்தியன் என்பது என்பேருன்னு காந்தியவாதி ரேஞ்சுல பீலிங்ச போட்டுட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாரு.

சரி இப்போ ஒருத்தன(பேச்சுலர) செலக்ட் பண்ணிட்டாங்கன்னு வெச்சுகோங்க. மொதல்ல அவன் work permit எடுக்கணும் அப்பறம் visa எடுக்கணும்.. இதுக்கான காலக்கெடு நம்ப போற நாட்ட பொறுத்து மாறும். US னா ஒரு வருஷம் ஆகும் (அது வரைக்கும் நம்ப உசுரோட இருக்கோமோ இல்லையோ) Uk னா ஒரு மாசம் ஆகும். இதுல US விசா எடுக்கறதுல மட்டும் ஒரு உயரமானவெளிச்சம் (highlight)! என்னன்னா ஒரு கம்பெனி எத்தன விசாவ consulate submit பண்ணாலும், வருசத்துக்கு இவளோ பேரைத்தான் அனுப்புவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கு….அதனால சிக்கிம் சூப்பர், பூட்டான், மணிப்பூர் லாட்டரி மாதிரி computerised லாட்டரி சிஸ்டத்துல செலக்ட் பண்ணுவாங்க அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்கன்னு சேதி வரும்அதுக்கும் பொறகு consulateகாரன் நாள் குறிச்சி கூப்புட்டனுப்சு, ஏன் போற எதுக்கு போறேன்னு விதி படத்துல டைகர் தயாநிதிய சுஜாதா கேக்கற மாதிரி கேட்டு, கொடஞ்சு நம்ப பாஸ்போர்ட்ல குமுக்குனு ஒரு குத்து குத்துனாதான் நம்ப பயலுக லேசா சிரிப்பானுக இல்லேனா மந்திரிச்சு உட்ட மாதிரி ஆயிருவானுக!

இந்த லாட்டரில பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே….அறிஞர் அண்ணா சொன்ன மாதிரிவிழுந்தா வீட்டுக்கு விழாட்டா நாட்டுக்குன்னு இருக்கறவன்சந்தோசமா இருப்பான். “இந்த சாப்ட்வேர் வேலை எனக்கு புடிச்சிருந்துச்சு, என் பேரு அன்புசெல்வன்…US என்னோட 25 வருஷ கனவு, தவம்னு கெளதம் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவனெல்லாம் கொஞ்ச நாளைக்கு குவாட்டர் அடிச்ச கொரங்கு மாதிரியே திரியுவானுக!

நூத்துக்கு எண்பது சதவீதம் US இல்ல UK தான் ஆன்சைட் அமையும்சரி ஒரு வழியா விசா கிடைச்சிருச்சுனா. மொதல்ல நமக்காக சொன்ன ப்ராஜெக்ட் இன்னும் நமக்காத்தான் இருக்கான்னு பாக்கணும். இல்லேன்னா அடுத்த பஸ் வெடியால அஞ்சுமணிக்குத்தான் அது வரைக்கும் இப்படி ஓரமா உக்காந்துக்கப்பான்னு இந்த கிராமத்துல எல்லாம் சொல்ற மாதிரி அடுத்த ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியது தான்


Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter