த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

அகால மரணம் நடந்தவரோட சொத்துகளும் குழந்தைகளும், அவரோட மனைவி/கணவனுக்குத் தானாகவே போய்ச் சேரும்ங்ற வகையிலதான் பெரும்பாலான மாகாணங்கள்ல சட்டம் இருக்கு. ஆனாலும், உசுலு(உயில்) இல்லாதபட்சத்துல சில நடைமுறைச் சிக்கல்களும், அதிக செலவீனமும், வில்லங்கச் சிக்கலும் ஏற்பட வாய்ப்பு இருக்கு. கூட‌வே, அதிகப்படியான பராமரிப்பு நிர்மாண‌ வ‌ரியும் செலுத்த‌ வேண்டி இருக்கும்.

அது பரவாயில்லை, கணவன், மனைவி ரெண்டு பேருமே அகால மரணத்துக்கு ஆட்பட்டா, நிலைமை ரொம்பச் சிக்கல். சட்டப்படி அனைத்து சொத்துகளும், குழந்தைகள் குறிப்பிட்ட வயதை எட்டுற‌ வ‌ரையிலும் அனுப‌விக்க‌ முடியாது. உயில் இல்லாத‌ ப‌ட்ச‌த்துல‌, மாகாண‌ அர‌சு ஒருத்த‌ரை நிய‌மிச்சு, யாரையாவ‌து பாதுகாவ‌ல‌ரா நிய‌மிக்க‌ முய‌ற்சி செய்யும். நெருங்கின‌ உற‌வின‌ர்க‌ள் இருந்தா அவ‌ங்க‌ளுக்கு முன்னுரிமை.

பெரும்பாலும் நம்மவர்களுக்கு உற‌வின‌ர்க‌ள் ப‌க்க‌த்துல‌ இருக்க‌ வாய்ப்பு இருக்காது. அந்த‌ ச‌ம‌ய‌த்துல‌ குழந்தைக‌ளும் சொத்தும் அர‌சு க‌ட்டுப்பாட்டுக்கு வந்து, அவிங்களையும் சொத்துகளையும் பராமரிக்கும். அர‌சு, அத‌ற்கான‌ க‌ட்ட‌ண‌த்தை இருக்குற‌ சொத்துல‌ இருந்து எடுத்துக்கும். குழந்தைக‌ள் வளந்து, அந்த‌ வ‌ய‌சை எட்டும் போது வ‌ரியும் ப‌ராம‌ரிப்புக் க‌ட்ட‌ண‌முமாவே சொத்து க‌ரைஞ்சு போயிடாது?!

இதெல்லாத்தை விடச் சிக்கல் கல்யாணமாகாத இளைஞர்களுக்குத்தான். இவிங்களுக்கு என்ன சொத்து இங்க இருக்கு? யார் உறவினர்கள்?? இதுகளை எல்லாம் நம்ப வெச்சி, மீட்டெடுக்குறது ரொம்பச் சிரமம். அப்படியே நண்பர்கள் மூலமா முயற்சிகள் மேற்கொண்டாலும், பூர்த்தியா செய்யவே முடியாது. அதிக செலவாகும். அந்த நேரத்துல, மாகாண அரசு மிச்சமிருக்குற சொத்துகளை எடுத்துக்கும். எடுத்து பள்ளிகள், பாதுகாப்பகங்கள்ன்னு நல்ல காரியங்களுக்காக கொடுத்துடுவாங்க.

சரி, இதெல்லாத்துக்கும் என்னதான் தீர்வு? உயில் எழுதி வெக்குறதுதாங்க தீர்வு. அதனுடைய முக்கியத்துவம், அந்த சூழ்நிலையிலதான் தெரிய வரும். பெத்த குழந்தைகள் நிலைமய நினைச்சுப் பாருங்க. தாத்தா, பாட்டி, உறவினர்கள்ட்ட போக வேண்டாமா? ஆக, உயில் ரொம்ப முக்கியம். இதுக்காக சட்டத்தரணிகிட்டப் போனா, $300ல இருந்து $2000 வரைக்கும் மொய் அழுக வேண்டி இருக்கும். நாமா செஞ்சா, $25ல முடிச்சுடலாம். சரி, இனி அதுக்கான வழி முறைகளைப் பாக்கலாமா?

முதல்ல செய்ய வேண்டியது என்னன்னா,வரவு, செலவு, முதலீடு, காப்புரிமை, ஓய்வூதியக் கணக்கு மற்றும் இன்னபிற சம்பந்தப்பட்ட தகவல்கள் எல்லார்த்தையும் தொகுத்து, ஒரு இடத்துல கோப்பாக்கி வைக்கணும். என்னுடைய யூகம், 90% பேர் அவிங்களுடைய மதிப்பு என்ன, அவிங்களுடைய கணக்குகள் பற்றின விபரம் தெரிஞ்சு வெச்சிருக்க மாட்டாங்க. அவிங்களுக்கான பட்டியல் இதோ! உடனே, தகவலைச் சேகரிச்சு குறிப்புல போட்டு வையுங்க. இருப்புத் தொகை குறிப்பிடத் தேவை இல்லை. குறைந்த பட்சம், எந்த நிறுவனத்துல கணக்கு இருக்குங்றதையாவது எழுதி வைக்கணும்.

Assets

Group Life Insurance,
Employer Settlement Information if applicable
Umbrella Insurance details
Funeral Insurance details
Personal Life Insurance details
Insurance with Credit Cards
Travel Life Insurance
Non Insurance Claims
Real Estate Equity
401k
Pension Plan/Social Security
Stocks/Bonds/Rental/IRA/Vehicle/Cars/Boats/
College Savings 403k
Lockers/Jewelry
Savings/Checking/FSA/CDs
Annuity
Tax Returns
Personal Assets
Personal Loans/Mortgage etc, etc..,
Hot Cash
Miles & Rewards

Liabilities

Mortgage Payment
Vehicle Loans
Credit Cards
Loans against 401k

மேல சொன்ன விசயங்கள் பற்றின தகவல்களைத் தொகுத்து, உங்களுக்கு நம்பகமான இடங்கள், வீட்லயோ அல்லது பாதுகாப்புப் பெட்டகத்துலயோ வெக்கலாம். அந்த இடத்தைப் பற்றின விபரத்தை உயில்ல குறிப்பிடுதல் நலம். ஓரளவுக்கு இந்த வலையகத்துல உங்க எல்லாக் கணக்குகளையும் ஒருங்கிணைக்க முடியும், சேவை இலவசம். இதுக்கு அப்புறமா, நீங்க உயில் தயாரிக்கத் தெரிவு செய்ய வேண்டியது ரெண்டு விசயம். முதலாவது நிறைவேற்றுநர், அடுத்தது பாதுகாவலர்.

நிறைவேற்றுநர் (executor) யாராக வேணுமானாலும் இருக்கலாம். அவிங்க உயில்ல குறிப்பிட்டு இருக்குறபடி, காரியங்களை நடத்தி வைக்கக் கூடியவரா இருக்கணும். நீங்க இருக்குறபக்கம் இருக்கக் கூடியவரா இருக்கணும். உயில் எழுதின பிறகு, ஒரு நகலை அவ்ர்கிட்ட கொடுத்து வைக்கிறது உசிதம். பாதுகாவலர்(guardian)ங்றது, நீங்க உங்க குழந்தைகளுக்கு யார் பாதுகாவலரா நியமனம் செய்யுறதுங்றதுதான். குழந்தைகள் அந்த குறிப்பிட்ட வயசை அடையற வரையிலும், இவர்கிட்டத்தான் வளரும். இவர் சொத்துகளையும் பராமரிப்பு செய்ய உரிமை இருக்கும். இவர்கிட்ட பொறுப்புகளை ஒப்படைக்குறதுதான் நிறைவேற்றுநர் வேலை. பாதுகாவலர் பொறுப்பு எடுத்ததுக்கு அப்புறம், நிறைவேற்றுநர்க்கு கடமை முடிஞ்சது.

மேல குறிப்பிட்டதைச் செய்த பிறகு, நீங்க உயில் எழுதத் தயார். நிறைய வலையகத்துல, உயில் எழுது சேவை குறைந்த கட்டணத்துல நீங்களாகவே செய்யக் கூடிய வகையில இருக்கு. அதுல போயி, உங்க விபரங்களைக் கொடுத்து, உயில்(Last Will & Testament) முன்வரைவு ஆவணத்தை தரவிறக்கம் செய்திடுங்க. இதற்கான கட்டணம், அதிகபட்சம் $20. அதன் பின்னாடி, மூனு சாட்சியங்களோட, சான்றுறுதி (notary public) அலுவலர் முன்னாடி குறிப்பிட்ட இடத்துல கையொப்பம் இடணும். கையொப்பம் இட்டதும், அது முறையான உயில் ஆயிடும். இஃகிஃகி!


எங்க நவசக்தி தமிழ்ப் பண்பாட்டுக் குழுவில இதைப் பற்றிப் பேசப் போறேன்னு சொன்னதும், அதை அப்பிடியே பதிவாப் போட்டுடுங்கன்னு சொன்ன அண்ணன் மகேசுக்கு இந்தப் படைப்பு! வேற எதனா, இது குறிச்சு ஐயப்பாடு இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க. நான் தெரிஞ்சிருந்தா, எனக்குத் தெரிஞ்ச தகவலைப் பகிர்ந்துகிடுறேன். முடிஞ்சா இந்த பதிவையோ, தகவலையோ உங்க நண்பர்கள்கிட்டவும் பகிர்ந்துகுங்க.... பதிவுத் திருட்டுன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். இஃகிஃகி!

இப்ப எதுக்கு இப்படி ஒரு பதிவு?

என்ன செய்ய? விமானம் எல்லாம் தண்ணி தட்டுது... போற வாற ஊர்திகள், அங்க இங்க இடிக்குது... போதாக்குறைக்கு துப்பாக்கி குண்டுகளும் பதம் பாக்குது.... இந்திய இளைஞர்கள் பெரிய நிறுவன(branded cloths, iphone) உடுப்புகள்ல வலம் வர்றது எல்லாம், பொருளாதார மந்தத்துல பாதிக்கப் பட்டவிங்களை உறுத்தலாம்....பாத்து சூதானமா இருந்துக்குங்க அப்பு....

நன்றி: பழமைபேசி

0 comments:

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter